Tamilnadu

திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் அரசியல் விவாதங்களில் பங்கேற்பது சரியா? என்றும் திராவிட மாடல் ஆட்சி தொடர்ந் திருந்தால் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை கொண்டு வந்திருப்போம் என்றும் சட்டப்பேரவையில் தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய நாகர் கோவில் சட்டமன்றக் கழக உறுப்பினர் எஸ். ஆஸ்டின் குறிப்பிட்டார்.

சட்­டப்­பே­ர­வை­யில் கழக உறுப்­பி­னர் எஸ். ஆஸ்­டின் பேசி­ய­தா­வது:–

தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா, நவீன தமிழ்­நாட்­டைச் செதுக்­கிய சிற்பி, எங்­க­ளு­டைய தலை­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் ஆகி­யோர் இருக்­கும் திசை­நோக்கி என்­னு­டைய முதல் வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) திரா­விட மாடல் அர­சி­னு­டைய நாய­கர், தன்­னு­டைய நிர்­வா­கத் திற­மை­யால் தமிழ்­நாட்டை இந்­தி­யா­வின் முதன்மை மாநி­ல­மாக உயர்த்­திய ஓய்­வ­றியா உத­ய­சூ­ரி­யன், திட்­டங்­கள்­மூ­லம் மக்­கள் உள்­ளங்­க­ளில் நிரந்­த­ர­மா­கக் குடி­யி­ருக்­கக்­கூ­டிய எங்­கள் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­களை வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)

பேர­வைத் தலை­வர் அவர்­களே, நிதி­நிலை அறிக்­கைக் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­வதை எப்­ப­டி­யும் தடுத்து விட­வேண்­டும் என்ற நோக்­கத்­தில், சில சதி காரர்­க­ளால் விரிக்­கப்­பட்ட சதி­வ­லை­யைக் கிழித் தெறிந்­து­விட்டு, அனைத்­துத் தடை­க­ளை­யும் தகர்த் தெறிந்­து­விட்டு, சதி­கா­ரர்­க­ளின் முகத்­தில் கரி­யைப் பூசி­விட்டு, இன்று கம்­பீ­ர­மாக சிங்­க­மென இந்த அவை­யில் வீற்­றி­ருக்­கும் எங்­க­ளு­டைய இளைய தலை­வர், (மேசை­யைத் தட்­டும் ஒலி) இந்த அவை­யில் எங்­களை வழி­ந­டத்­திக் கொண்­டி­ருக்­கும் சட்­ட­மன்­றத்­தின் எதிர்க்­கட்­சித் தலை­வர், எங்­க­ளு­டைய இளைய கலை­ஞர், அன்­புச் சகோ­த­ரர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­களை வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)

பேர­வைத் தலை­வர் அவர்­களே, இந்த அவை­யில், இன்று மானி­யக் கோரிக்­கை­க­ளின்­மீது பேசு­வ­தற்­கான வாய்ப்­பினை எனக்கு வழங்­கிய தங்­க­ளுக்கு என்­னு­டைய பணி­வான நன்­றி­யை­யும், என்­னு­டைய தொகுதி மக்­க­ளுக்கு என்­னு­டைய வாழ்த்­துக்­க­ளை­யும், வணக்­கத்­தை­யும் நான் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.

பதவியிலிருந்து நீக்கிட வேண்டும்!

பேர­வைத் தலை­வர் அவர்­களே, இங்கு நடை­பெ­றக்­கூ­டிய விவா­தங்­கள் எல்­லா­வற்­றை­யும் இன்­றைக்கு நேர­லை­யில் அனைத்து மக்­க­ளும் பார்க்­கக்­கூ­டிய வகை­யில் நாம் ஏற்­பா­டு­க­ளைச் செய்­தி­ருக்­கின்­றோம். எனவே, நம்­மு­டைய விவா­தங்­க­ளைப் பற்­றி­யும், நம்­மு­டைய நடை­மு­றை­க­ளைப் பற்­றி­யும் மக்­கள் மன­தில் பல்­வேறு கருத்­துக்­கள் எழு­கின்­றன. எனவே, மக்­கள் மன­தில் இருக்­கக்­கூ­டிய ஒரு சில கருத்­துக்­களை என்­னு­டைய மக்­க­ளு­டைய குர­லா­கத்­தான் நான் இங்கே ஒலிக்க வேண்­டும். நாம் அவர்­க­ளு­டைய பிர­தி­நி­தி­கள். அந்த ஒரு சில கருத்­துக்­களை என்­னு­டைய கருத்­துக்­க­ளாக, இந்த அவை­யில் சற்றே குறைந்த நேரத்­தில் எடுத்­து­வைத்­து­விட்டு, அதற்­குப் பிறகு மானி­யக் கோரிக்­கை­க­ளின்­மீது நான் பேச­லாம் என்று கரு­து­கின்­றேன். அதற்கு முன்­பாக இந்த அவைக்கு இன்­னொரு கருத்­தினை உங்­கள்­மூ­ல­மா­கச் சொல்­லக் கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றேன். Tamil Nadu State Minorities Commission-உடைய Chairman ஆக மரி­யா­தைக்­கு­ரிய ஃபெலிக்ஸ் ஜெரால்டு அவர்­களை இந்த அர­சாங்­கம் நிய­மித்­தி­ருக்­கின்­றது. அந்த post, ஒரு statutory post ஆக இன்­றைக்கு மதிக்­கப்­ப­டு­கின்­றது. Statutory post-ல் இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள் அர­சி­யல் தொடர்­பான தொலைக்­காட்சி விவா­தங்­க­ளில் கலந்­து­கொண்டு, தங்­கள் கருத்­துக்­களை மற்­ற­வர்­களை abuse செய்­யக்­கூ­டிய வகை­யில் பேசக்­கூ­டாது, பங்­கெ­டுக்­கக்­கூ­டாது என்­பது சட்­டப்­ப­டி­யா­னது. நம்­மு­டைய Tamil Nadu State Minorities Commission Act, 2010 அதைத்­தான் சொல்­கி­றது. அதில், ஓர் உறுப்­பி­னர் தகுதி நீக்­கம் அல்­லது தலை­வர் தகுதி நீக்­கம் என்று சொன்­னால், Chapter-II-ல் தெளி­வா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது: “In the opinion of the Government, has so abused the position of Chairperson or member, as the case may be, as to render that person’s continuance in office detrimental to the public interest.” எனவே, நான் உங்­கள்­மூ­ல­மாக இந்த அர­சைக் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம், அவரை நிய­மித்­தி­ருக்­கின்­றீர்­கள். நாங்­கள் அதில் தலை­யி­டக்­கூ­டிய தேவை­யில்லை. இருந்­தா­லும் இது­போன்ற அர­சி­யல் விவா­தங்­க­ளில் அவர் பங்கு கொள்­வதை, இந்­தச் சட்­டத்­தின்­படி தடுக்க வேண்­டும் அல்­லது அது தொடர வேண்­டு­மென்று நீங்­கள் விரும்­பி­னால், அவரை அந்­தப் பத­வி­யி­லி­ருந்து நீக்க வேண்­டு­மென்று உங்­கள்­மூ­ல­மாக இந்த அரசை நான் கேட்­டுக்­கொள்­ளக் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.

பேர­வைத் தலை­வர் அவர்­களே, இது என்­னு­டைய கருத்து. இதில் முடிவு எடுக்க வேண்­டி­யது பேர­வைத் தலை­வர் அவர்­கள். பேர­வைத் தலை­வர் அவர்­களே, 1977 ஆம் ஆண்­டி­லி­ருந்து நான் என்­னு­டைய அர­சி­யல் பணி­யைத் தொடங்­கி­ய­வன். 1978-ல் மாண­வர் தி.மு.க.-வில் நான் உறுப்­பி­ன­ராக இருந்­த­வன். பல­ருக்கு இதெல்­லாம் தெரி­யாது.

1986 ஆம் ஆண்­டில் உள்­ளாட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு, வெற்றி பெற்று, அண்­ணன் கே.என். நேரு அவர்­க­ளைப் போல, அவர் Chairman ஆக இருந்­தார், நான் ஊராட்சி மன்­றத்­தி­னு­டைய தலை­வ­ராக 1986 ஆம் ஆண்­டில் பொறுப்­பேற்­ற­தி­லி­ருந்து, 40 ஆண்டு கால­மாக இந்த மாவட்­டத்­தில் பொறுப்­பில் இருந்­தா­லும், இல்­லா­விட்­டா­லும் பொதுப் பணியை, மக்­கள் பணியை நான் ஆற்­றிக் கொண்டு வரு­வது பல­ருக்­கும், உங்­க­ளுக்­கும் தெரி­யும். அதே­போல், நம்­மு­டைய அண்­ணன் கே.என். நேரு அவர்­கள், அண்­ணன் எ.வ.வேலு அவர்­கள் எல்­லாம் 50 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக பொதுப் பணி­யில், அர­சி­யல் பணி­யில் ஈடு­பட்டு, இந்த அவை­யில் பல ஆண்­டு­கா­லம் இருந்­த­வர்­கள்.

அதே­போல், நம்­மு­டைய அவை முன்­ன­வர் அவர்­கள் இங்கு இருக்­கின்­றார், அண்­ணன் கே.ஏ. செங்­கோட்­டை­யன் அவர்­கள் 1977 ஆம் ஆண்­டி­லி­ருந்து இந்த அவை­யில் இருக்­கின்­றார்­கள். ஏன்? பேர­வைத் தலை­வர் நீங்­க­ளே­கூட, புரட்­சித் தலை­வர் எம்.ஜி.ஆர். அவர்­க­ளு­டைய காலத்­தி­லி­ருந்து 1980 ஆம் ஆண்­டிலே இந்த அவைக்கு வந்து, பொதுச் சேவை­யில் உங்­களை ஈடு­ப­டுத்­திக்­கொண்டு, இந்த அவை­யி­னு­டைய நட­வ­டிக்­கை­க­ளை­யெல்­லாம் உன்­னிப்­பாக நீங்­கள் பார்த்த கார­ணத்­தி­னால்­தான், இன்­றைக்கு ஓர­ளவு balance செய்து கொண்­டி­ருக்­கி­றீர்­கள். முழு­மை­யாக balance செய்­வீர்­கள் என்று சொல்ல முடி­யாது, இவ்­வ­ள­வு­தான் உங்­க­ளால் செய்ய முடி­யும். ஓர­ளவு balance செய்து, இந்­தப் பக்­க­மும் பார்க்­கி­றீர்­கள், அந்­தப் பக்­க­மும் பார்க்­கி­றீர்­கள். இரண்டு பக்­கங்­க­ளி­லும் பிரச்­சினை இல்­லாத அள­விற்கு இந்த அவையை கொண்­டு­போக வேண்­டும். அமை­தி­யாக நடத்த வேண்­டு­மென்று நீங்­கள் விரும்­பு­கின்­றீர்­கள். அதற்கு முழு­மை­யாக எங்­க­ளு­டைய தலை­வ­ரு­டைய தலை­மை­யில், நாங்­கள் உங்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு தந்து கொண்­டி­ருக்­கின்­றோம்.

ஆனால், இங்கு நிலை என்­ன­வென்று சொன்­னால், live-ல் ஒளி­ப­ரப்­பப்­ப­டு­வதை மக்­கள் பார்த்து என்ன சொல்­கி­றார்­கள் என்­றால், பொது­வாக, எதிர்க்­கட்­சி­கள் கேள்வி கேட்­கக்­கூ­டிய நிலை­யில் வரு­வார்­கள். நீங்­கள் ஒவ்­வொரு ஆண்­டும் பார்த்­தி­ருப்­பீர்­கள், இத்­தனை ஆண்டு காலம் நடந்த சட்­ட­மன்­றத்தை பார்க்­கின்­ற­பொ­ழுது, எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள், ஆளுங்­கட்­சி­யைப் பார்த்து என்ன கேள்­வி­யைக் கேட்­பார்­கள்? மக்­க­ளுக்­குத் தேவை­யா­னதை, மக்­கள் என்ன கேட்க வேண்­டு­மென்று விரும்­பு­கின்­றார்­களோ! மக்­கள் என்ன பிரச்­சி­னை­யில் இருக்­கின்­றார்­களோ! அந்­தப் பிரச்­சி­னையை கேள்­வி­யாக ஆளுங்­கட்­சி­யி­டத்­தில் கேட்­பார்­கள். ஆளுங்­கட்சி உறுப்­பி­ன­ரு­டைய கடமை என்­ன­வென்று சொன்­னால், எதிர்க்­கட்­சிக்­கா­ரர்­கள் என்ன கேள்வி கேட்­கின்­றார்­களோ, அந்­தக் கேள்­விக்கு சரி­யான பதி­லைச் சொல்லி, அவர்­களை convince செய்து, இந்த அவையை அமை­தி­ யாக நடத்­து­வ­தற்கு முய­லக் கூடி­ய­வர்­கள்­தான் ஆளுங்­கட்­சி­யைச் சார்ந்­த­வர்­கள். இந்த நடை­மு­றை­தான் அப்­போ­தெல்­லாம் இருந்­தி­ருக்­கி­றது. சில நேரங்­க­ளில் சல­ச­லப்பு வரு­வது சாதா­ர­ணம்.

பிரச்­சி­னைக்குப் பதில்­த­ராத த.வெ.க. அரசு

ஆனால், இப்­போது இந்த 2 கூட்­டத்­தொ­டர்­களை நாம் பார்க்­கின்­ற­பொ­ழுது, மக்­கள் என்ன நினைக்­கின்­றார்­கள் என்­றால், நம்­மு­டைய பிரச்­சி­னையை எதிர்க்­கட்­சி­கள் பேசு­கி­றார்­கள், எதிர்க்­கட்­சித் தலை­வர் பேசு­கி­றார். ஆனால், பிரச்­சினை என்று என்ன கேள்­வி­யைக் கேட்­கின்­றார்­களோ அந்­தக் கேள்­விக்­கான பதிலை ஆளுங்­கட்சி தரு­வ­தில்லை. ஆனால், ஆளுங்­கட்சி என்ன செய்­கி­றது? ஏதா­வது தேவை­யில்­லாத சில பிரச்­சி­னை­களை சுற்றி வளைத்­துக்­கொண்டு வந்து, கடை­சி­யில் எதிர்க்­கேள்­வியை கேட்­கின்­றார்­கள் எதிர்க்­கட்­சி­யி­டம். எதிர்க்­கேள்­வி­க­ளைக் கேட் ­கின்­ற­போது, சில வார்த்­தை­களை எதிர்க்­கட்­சி­யில் இருக்­கக்­கூ­டிய உறுப்­பி­னர்­களை, அவர்­க­ளு­டைய உணர்­வு­க­ளைத் தூண்­டக்­கூ­டிய வகை­யில், provoke செய்­கிற வகை­யில் சில வார்த்­தை­ களை பயன்­ப­டுத்­து­கின்ற கார­ணத்­தி­னால், உங்­களை அவர்­கள் தர்ம சங்­க­டத்­திற்கு உள்­ளாக்­கு ­கி­றார்­கள் என்­ப­து­தான் என்­னு­டைய பதில்.

பேர­வைத் தலை­வர் அவர்­களே, அவை முன்­ன­வர் அவர்­கள் இங்கே ஒரு கருத்­தைச் சொன்­னார்­கள். நீங்­கள் பேசு­கின்­ற­பொ­ழுது மானி­யக் கோரிக்­கை­யில் பேசுங்­கள் என்று சொன்­னார்­கள். மானி­யக் கோரிக்­கை­யில்­தான் பேச வேண்­டும். இருந்­தா­லும்­கூட, பல­பேர், பல உறுப்­பி­னர்­கள், அன்­றைக்கு நம்­மு­டைய ஊரக வளர்ச்சி மற்­றும் நீர்­வ­ளத் துறை அமைச்­சர் அவர்­கள்­கூட மானி­யக் கோரிக்­கை­யி­லான விவா­தத்­திற்­கான பதி­லு­ரை­யில், பதி­லு­ரையே இல்­லா­மல் ஒரு மணி­நே­ரம் ஏதோ பொதுக் குழு­வில் பேசு­வ­து­போல் பல்­வேறு கருத்­து­களை சுவா­ரஸ்­ய­மாக சொன்­னார்­கள். நாங்­க­ளும் அந்த ஒரு மணி­நே­ரம் கேட்­டுக்­கொண்­டு­தான் இருந்­தோம். எல்­லாம் முடித்­து­விட்டு பதி­லுரை சொல்­வார்­கள் என்று பார்த்­தால் பதி­லுரை இல்லை.

அத­னால் மக்­க­ளு­டைய கருத்­து­களை மட்­டும் ஒன்­றி­ரண்டு எடுத்து வைத்­து­விட்டு, (குறுக்­கீடு) இந்த அவை­யி­னு­டைய கவ­னத்தை ஈர்த்­து­விட்டு நான் செல்­கி­றேன்.

இந்த அவை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் 234 உறுப்­பி­னர்­களை உள்­ள­டக்­கிய ஓர் அவை இது.

மக்­க­ளுக்குப் புரி­கின்­றது!

ஆனால், இன்று இருப்­பது 227 பேர் இங்கே இருக்­கின்­றார்­கள். நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள், இரண்டு தொகு­தி­யில் போட்­டி­யிட்ட கார­ணத்­தி­னால், ஒரு தொகு­தியை அவர் இரா­ஜி­னாமா செய்­து­விட்­டார். அது­போக, 6 உறுப்­பி­னர்­க­ளு­டைய பணி­யி­டம் இன்­றைக்கு இங்கே காலி­யாக இருக்­கி­றது. 6 உறுப்­பி­னர்­கள் பத­வி­யேற்ற ஒரு மாதத்­தி­லேயே தங்­க­ளு­டைய பத­வியை இரா­ஜி­னாமா செய்­து­விட்­டார்­கள். என்ன கார­ணம் என்­பது இன்று முழு­மை­யாக, வெட்ட வெளிச்­ச­மாக யாருக்­கும் தெரி­ய­வில்லை; ஆனால், மக்­க­ளுக்கு புரி­கின்­றது.

நம்­பிக்கை பொய்த்­து­விட்­டது!

பேர­வைத் தலை­வர் அவர்­களே, என்­னு­டைய கோரிக்கை என்­ன­வென்­றால், 6 தொகு­தி­யின் மக்­க­ளு­டைய குரல் இந்த அவை­யில் இன்­றைக்கு முடக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அவர்­க­ளுக்கு குரல் கொடுப்­ப­தற்கு இன்­றைக்கு ஆள் இல்லை. கிட்­டத்­தட்ட 3 மாத காலம் ஆகி­விட்­டது. ஒரு தேர்­த­லில் போட்­டி­யி­டு­வது, வெற்றி பெறு­வது என்­பது எவ்­வ­ளவு சிர­மம் என்­பது எங்­க­ளுக்­கெல்­லாம் தெரி­யும். ஒரு மாத காலம் கடு­மை­யாக அந்த 6 உறுப்­பி­னர்­க­ளும் அங்கே பணி­யாற்­றி­யி­ருப்­பார்­கள். வாக்­க­ளித்த மக்­கள், 60 வயது, 70 வயது, 80 வயது தாண்­டி­ய­வர்­க­ளெல்­லாம் நடக்க முடி­யாத அள­வி­லே­கூட அந்த வாக்­குச்­சா­வ­டிக்கு வந்து, இவ­ருக்கு ஓட்டு போட வேண்­டும்; இவ­ருக்கு ஓட்­டுப் போட்­டால், இந்­தப் தொகுதி மக்­க­ளுக்கு பல்­வேறு நன்­மை­கள் கிடைக்­கும் என்ற ஒரு நம்­பிக்கை; அந்த நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில்­தான், அவர்­கள் அங்கு வந்து வாக்­க­ளிக்­கி­றார்­கள். ஆனால், அவர்­க­ளு­டைய நம்­பிக்­கை­யெல்­லாம் இன்­றைக்கு பொய்த்து போய்­விட்­டது. அது­போல், வெற்றி பெறக்­கூ­டிய நேரத்­தில் மிகப்­பெ­ரிய ஒரு களிப்பு இருக்­கும். சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும் சரி, அவ­ரு­டைய குடும்­பத்­தா­ரும் சரி, அவ­ரு­டைய நண்­பர்­க­ளும் சரி, அவ­ருக்கு வாக்­க­ளித்த தொகுதி மக்­க­ளுக்­கும் மிகப் பெரிய மகிழ்ச்சி, மிகப் பெரிய கொண்­டாட்­டம் இருக்­கும். 5 ஆண்டு காலம், அந்த MLA பதவி என்­பது மிகப் பெரிய ஓர் அந்­தஸ்து; மிகப் பெரிய ஒரு மரி­யாதை. இதை­யெல்­லாம் ஒரு­வர் இழந்­து­விட்டு, வெற்றி பெற்று, பத­வி­யேற்ற ஒரே மாதக் காலத்­திற்­குள்­ளாக ஒரு கூட்­டத்­தொ­ட­ரி­லே­கூட கலந்­து­கொள்­ளா­மல் . . .

(குறுக்­கீ­டு­கள்)

எங்­க­ளு­டைய தலை­வர் அவர்­கள் சொல்­லி­விட்­டார்­கள். மேற்­கொண்டு பேச­வேண்­டாம். நீங்­கள் மானி­யக் கோரிக்­கை­யில் பேசுங்­கள் என்று எங்­கள் தலை­வர் அவர்­கள் சொல்­லி­விட்­டார்­கள். ஆனால் மக்­கள் கருத்­து­கள் இன்­னும் நிறைய இருக்­கி­றது. இந்த அவை­யி­னு­டைய நட­வ­டிக்­கை­கள் குறித்து மக்­க­ளு­டைய கருத்து நிறைய இருக்­கி­றது. அதை­யெல்­லாம் இங்கு என்­னு­டைய குர­லாக ஒலிக்க வேண்­டு­மென்று சொன்­னால், ஒரு­மணி நேரம் இருந்­தால்­கூட போதாது. இருந்­தா­லும், எங்­க­ளு­டைய தலை­வர் அவர்­க­ளு­டைய கட்­ட­ளையை ஏற்று, மானி­யக் கோரிக்­கை­க­ளில் என்­னு­டைய கருத்­து­களை எடுத்­து­வைக்­கின்­றேன்.

பேர­வைத் தலை­வர் அவர்­களே, தொழில் துறை­யின் வளர்ச்­சி­தான் ஒரு நாட்­டி­னு­டைய பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு வலு­வான ஓர் அடித்­த­ளத்தை அமைத்­துக் கொடுக்­கின்­றது. உற்­பத்தி, ஏற்­று­மதி, முத­லீடு மற்­றும் வேலை­வாய்ப்பு ஆகிய அனைத்­துத் துறை­க­ளி­லும் இன்­றைக்கு தமிழ்­நாடு தனது தனித்­து­வ­மான இடத்தை கடந்த ஐந்து ஆண்­டு­க­ளா­கப் பெற்­றுள்­ளதை நாம் அத்­தனை நபர்­க­ளும் இன்­றைக்கு அறி­வோம்.

இளை­ஞர்­க­ளுக்­கும், பெண்­க­ளுக்­கும் அதி­க­ள­வி­லான வேலை­வாய்ப்பு. 2030 ஆம் ஆண்­டிற்­குள் தமிழ்­நாட்டை 1 டிரில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் பொரு­ளா­தா­ர­மாக உயர்த்த வேண்­டு­மென்ற இலக்கை நோக்­கிய எங்­க­ளு­டைய தொழில்­துறை பய­ண­மா­னது,

2024-–2025 ஆம் ஆண்­டி­லேயே இந்­தி­யா­வில் எங்­கும் சாதிக்க முடி­யாத ஒரு சாத­னை­யாக, 11.19 சத­வி­கி­தம் என்ற பொரு­ளா­தார இரட்டை இலக்கு வளர்ச்­சி­யைச் சாதித்­துக் காட்­டி­யது திரா­விட மாடல் அரசு. (மேசை­யைத் தட்­டும் ஒலி)

முத­லீ­டு­களை ஈர்ப்­பது மட்­டு­மல்ல, அவற்றை வேலை­வாய்ப்­பு­க­ளாக மாற்­று­வது, தொழில் வளர்ச்­சியை மாவட்­டங்­கள்­தோ­றும் விரி­வு­ப­டுத்­து­ வது, எதிர்­கா­லத்­தில் தொழில்­க­ளுக்கு வேண்­டிய, தேவை­யான உட்­கட்­ட­மைப்­பு­களை உரு­வாக்­கு­வது போன்ற ஒருங்­கி­ணைந்த அணு­கு­மு­றை­யின் கார­ண­மா­கத்­தான், கடந்த ஐந்­தாண்­டு­க­ளில் தமிழ்­நாடு தொழில்­து­றை­யில் உச்­சத்தை எட்­டி­யது. பேர­வைத் தலை­வர் அவர்­களே, கடந்த ஐந்­தாண்­டு­க­ளில் மட்­டும் 1,179 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் போட்டு, கிட்­டத்­தட்ட ரூ.12.37 இலட்­சம் கோடி முத­லீ­டு­களை ஈர்த்­தது தமிழ்­நாடு அரசு. அந்­தச் சாத­னை­யைப் புரிந்­தது எங்­க­ளு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யி­னு­டைய அர­சர், முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)

இதன்­மூ­ல­மாக, கிட்­டத்­தட்ட 36 இலட்­சத்­திற்­கும் மேற்­பட்ட வேலை­வாய்ப்­பு­கள் தமிழ்­நாட்­டில் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. குறிப்­பாக, மோட்­டார் வாகன உற்­பத்­தி­யில் முத­லி­டம்; ஆடை­கள் உற்­பத்­தி­யில் முத­லி­டம்; தோல் மற்­றும் தோல் சார்ந்த பொருட்­க­ளின் உற்­பத்­தி­யில் முத­லி­டம்; கணினி மற்­றும் ஒலிக் கரு­வி­கள் உற்­பத்­தி­யில் இரண்­டா­மி­டம்; இயந்­தி­ரங்­கள் மற்­றும் உப­க­ர­ணங்­கள் உற்­பத்­தி­யில் இரண்­டா­மி­டம்; பிற போக்­கு­வ­ரத்து சாத­னங்­க­ளின் உற்­பத்­தி­யில் இரண்­டா­மி­டம். மின்­ன­ணு­வி­யல் ஏற்­று­ம­தி­யில் இந்­தி­யா­ வில், தமிழ்­நாட்­டி­னு­டைய பங்­க­ளிப்பு மட்­டும் 41.23 சத­வி­கி­தம். இவ்­வாறு தொழில்­து­றை­யில், தமிழ்­நாடு மிகப்­பெ­ரிய சாத­னை­களை, கடந்த ஐந்­தாண்­டு­க­ளில் உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றது.

பேர­வைத் தலை­வர் அவர்­களே, வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டினை (மேசை­யைத் தட்­டும் ஒலி) 2024 ஆம் ஆண்டு எங்­கள் திரா­விட மாடல் ஆட்சி நாய­கர் தள­பதி அவர்­கள் நடத்தி, அதன்­மூ­ல­மாக இந்­தி­யாவே திரும்பி பார்க்­கும் வகை­யில் 631 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் போட்டு, அதன்­மூ­ல­மாக 6 இலட்­சத்து 64 ஆயி­ரத்து 181 கோடி ரூபாய் முத­லீ­டு­க­ளைத் தமிழ்­நாட்­டிற்­குக் கொண்டு வந்­துள்­ளார்­கள். இதன்­மூ­லம், கிட்­டத்­தட்ட 14.5 இலட்­சம் பேருக்கு நேர­டி­யாக வேலை­வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

யாரும் செய்­யாத சாதனை!

முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்­காக 2021-–2026 வரை கிட்­டத்­தட்ட 12 முத­லீட்­டா­ளர்­கள் மாநா­டு­களை எங்­கள் தலை­வர் அவர்­கள் நடத்­தி­னார்­கள். முன்­னாள் முத­ல­மைச்­சர், எங்­கள் தலை­வர் அவர்­களே நேர­டி­யாக ஜப்­பான், சிங்­கப்­பூர், அமெ­ரிக்கா, ஜெர்­மனி போன்ற நாடு­க­ளுக்­குச் சென்று, அங்­குள்ள முத­லீட்­டா­ளர்­க­ளைச் சந்­தித்து, அவர்­க­ளு­டன் பேசி, மிகப்­பெ­ரிய முத­லீ­டு­க­ளைத் தமிழ்­நாட்­டிற்­குக் கொண்டு வந்­துள்­ளார்­கள். அவ­ரு­டைய வெளி­நாட்டு பய­ணங்­கள் மூல­மாக மட்­டும் 69 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் போடப்­பட்டு, ரூ.34,013 கோடி முத­லீ­டு­கள் இங்கு கொண்­டு­ வ­ரப்­பட்­டுள்­ளன. 2024 ஆம் ஆண்­டின் முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில் போடப்­பட்ட 631 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­க­ளில் 526 முத­லீ­டு­க­ளாக மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன. புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் போடப்­ப­டு­வ­தோடு அந்­தத் துறை நின்று விடக்­கூ­டாது. அந்­தப் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­களை முத­லீ­டாக மாற்­று­வ­தில்­தான் ஒரு அர­சி­னு­டைய வெற்றி இருக்­கி­றது. அந்த வெற்­றி­யைத் திரா­விட மாடல் அரசு, கடந்த ஐந்­தாண்­டு­க­ளில் சிறப்­பாக செய்­துள்­ளது. இந்­தி­யா­வில் யாரும் செய்ய முடி­யாத சாத­னை­களை, இந்­தத் தொழில்­து­றை­யில் கடந்த ஐந்­தாண்­டு­க­ளில் முத­லீ­டு­க­ளைக் கொண்டு வந்­தது தி.மு.க. அரசு. (மேசை­யைத் தட்­டும் ஒலி)

கிட்­டத்­தட்ட 526 முத­லீ­டு­கள்; இது கிட்­டத்­தட்ட 84 சத­வி­கி­தம். அந்த முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில் கொண்­டு­வந்த புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் MoU-க்கள் முத­லீ­டு­க­ளாக transfer செய்து, convert செய்­யப்­பட்­டது, 84 சத­வி­கி­தம். மொத்­த­மாக, 1,192 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள்­மூ­லம் 873 முத­லீ­டு­கள் convert செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன. இது கிட்­டத்­தட்ட 73 சத­வி­கி­தம். இந்­தி­யா­வில் எந்த மாநி­ல­மும் இந்­த­ள­விற்­குப் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­களை முத­லீ­டு­க­ளாக மாற்­றி­யது, வேறு எந்த மாநி­லத்­தி­லும் இல்லை. இது­தான் அதி­க­பட்­ச­மா­னது என்­பதை இந்த நேரத்­தில் தெரி­வித்­துக்­கொள்ள கட­மைப்­பட்டி ருக்­கின்­றேன்.

அதே­போல், வளர்ந்த புற­ந­கர்ப் பகு­தி­யில் படித்த இளை­ஞர்­க­ளுக்கு IT service மூலம், அவர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பும், அங்கு வளர்ச்­சி­யை­யும் கொண்டு வரு­வ­தற்­கா­கத்­தான் இந்­தி­யா­வில் முதல்­மு­றை­யாக எங்­க­ளு­டைய தலை­வர் அவர்­கள் TIDEL Neo Park என்ற ஒரு திட்­டத்­தைக் கொண்டு வந்­தார்­கள். முதன்­மு­த­லாக, TIDEL Park திட்­டத்­தைக் கொண்டு வந்­தது, எங்­க­ளு­டைய முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள். இன்­றைக்­குப் புதி­தாக வளர்ந்­து­வ­ரும் நக­ரங்­க­ளில், இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு உரு­வாக்­கக்­கூ­டிய வகை­யில் TIDEL Neo Park என்ற ஒரு புதிய திட்­டத்­தைக் கொண்டு வந்து,

பெரிய பெரிய மாந­க­ராட்­சி­க­ளில் மட்­டு­மல்ல, தென் மண்­ட­லங்­கள், டெல்டா மண்­ட­லங்­கள் என்று சொல்லி தூத்­துக்­குடி, தென்­காசி, தஞ்­சா­வூர், நாகப்­பட்­டி­னம், விரு­து­ந­கர், விழுப்­பு­ரம் உள்­ளிட்ட 10 இடங்­க­ளில் இந்த TIDEL Neo Park கொண்­டு­வ­ரப்­பட்டு, ஒவ்­வொன்­றி­லும் கிட்­டத்­தட்ட 600 நபர்­க­ளுக்கு இன்­றைக்கு வேலை­வாய்ப்பை உரு­வாக்கி கொடுத்­தி­ருக்­கக்­கூ­டிய அரசு திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு என்­பதை பெரு­மை­யோடு நான் இங்கே சொல்­லிக்­கொள்ள கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.

எனது தொகுதி சார்ந்த ஒரு கேள்­வியை தொழில் துறை அமைச்­சர் அவர்­க­ளி­டம் நான் வைக்க விரும்­பு­கி­றேன். எங்­க­ளு­டைய அரசு நாகர்­கோ­வில் பகு­தி­யிலே கொண்டு வந்த TIDEL Neo Park என்­கிற திட்­டம் ஏற்­கெ­னவே எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் பிப்­ர­வரி மாதத்­தில் பணி­கள் துவங்­கு­வ­தற்கு அடிக்­கல் நாட்­டப்­பட்­டது. ஆனால், இந்த அரசு பொறுப்­பேற்று இன்­றைக்கு மூன்று மாதங்­கள் ஆகின்­றன; அடிக்­கல் நாட்­டப்­பட்டு ஆறு மாதங்­கள் ஆகின்­றன. இன்­னும் இந்­தப் பணி­கள் துவங்­கப்­ப­ட­வில்லை. TIDCO நிறு­வ­னம்­தான் இந்­தப் பணியை மேற்­கொள்ள வேண்­டு­மென்று நான் கரு­து­கி­றேன். இது­கு­றித்து அதி­கா­ரி­களை தொடர்­பு­கொண்டு கேட்­ட­போது, பணம் இல்லை, எனவே நாங்­கள் இன்­னும் பணி­யைத் துவங்க வில்லை, அனைத்து formalities-ம் முடிந்­து­விட்­டது, அர­சாங்­கம் என்­றைக்கு TIDEL Neo Park-ற்கு பணத்­தைக் கொடுக்­கி­றார்­களோ, மறு­நாள் உங்­கள் பணி இடத்­தில் வேலை­யைத் துவங்­கி­வி­டு­வோம் என்று சொன்­னார்­கள்.

எனவே, நான் உங்­கள் மூல­மாக இந்த அரசை கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம், இது 600 இளை­ஞர் களுக்­கான வேலை­வாய்ப்பை உரு­வாக்­கக்­கூ­டிய இடம். நாகர்­கோ­வில் பகுதி, கன்­னி­யா­கு­மரி மாவட்­டம் என்­பது எந்­தத் தொழிற்­சா­லை­யும் வர­மு­டி­யாத, இடங்­கள் பற்­றாக்­குறை உள்ள ஒரு மாவட்­டம்; எந்­தத் தொழி­லும் அங்கு வர­மு­டி­யாது. இந்த இடத்தை மிக­வும் சிர­மப்­பட்டு, தேர்வு செய்­து­தான் TIDEL Neo Park-ஐ எங்­கள் தலை­வர் அவர்­கள் கொண்டு வந்­தி­ருக் கிறார்­கள். எனவே, இதை ஆளுங்­கட்சி, எதிர்க்­கட்சி, அங்கே எந்த சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் ஆறு தொகு­தி­க­ளி­லும் எங்­க­ளு­டைய உறுப்­பி­னர்­கள் வெற்றி பெற­வில்லை, மாற்­றுக் கட்­சி­தான் வெற்றி பெற்­றது என்ற எண்­ணத்­தை­யெல்­லாம் நீங்­கள் விட்­டு­விட்டு, இளை­ஞர்­க ­ளு­டைய. . .

நீங்­கள் அந்த இளை­ஞர்­க­ளின் வேலை வாய்ப்­பை­யும், எதிர்­கா­லத்­தை­யும் கருத்­தில்­கொண்டு அதற்­கான நிதியை TIDEL Neo Park-ற்கு TIDCO மூல­மாக உட­ன­டி­யாக ஒதுக்­கீடு செய்து, அந்­தப் பணியை உட­ன­டி­யாக துவங்­கு­வ­தற்கு உரிய நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள வேண்­டு­மென்று நான் அமைச்­சர் அவர்­களை கேட்­டுக்­கொள்ள கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.

அதே­போல, எங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில்­தான் 13 புதிய கொள்­கை­களை தொழில் துறை வெளி­யிட்­டது. அது உங்­க­ளு­டைய கொள்கை விளக்­கக் குறிப்­பி­லும் இருக்­கின்­றது. நிதி­நுட்­பக் கொள்கை, ஏற்­று­மதி மேம்­பாட்­டுக் கொள்கை, உயிர் அறி­வி­யல் மேம்­பாட்­டுக் கொள்கை, ஆராய்ச்சி மற்­றும் மேம்­பாட்­டுக் கொள்கை, காலணி மற்­றும் தோல்­பொ­ருட்­கள் கொள்கை, விண்­வெளி மற்­றும் பாது­காப்பு தொழில் கொள்கை, சரக்கு போக்­கு­வ­ரத்­துக் கொள்கை, பொது தனி­யார் கூட்­டாண்­மைக் கொள்கை, பொம்­மை­கள் உற்­பத்தி, சுழற் பொரு­ளா­தா­ரம், சேமிப்­புக் கிடங்கு, கடல் போக்­கு­வ­ரத்து உற்­பத்தி மற்­றும் கடல்­சார் உண­வுப் பொருட்­களை பதப்­ப­டுத்­து­தல் உள்­ளிட்ட புதிய கொள்­கை­க­ளு­ட­னும் எங்­க­ளு­டைய அரசு சிறப்­பாக தன்­னு­டைய இலக்கை நோக்கி பய­ணித்து சாத­னை­யைப் படைத்­துள்­ளது.

Also Read: “விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக” : த.வெ.க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!