Tamilnadu
சென்னையில் பயங்கரம் : நடைபயிற்சி சென்ற 60 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்!
சென்னை வேளச்சேரி 100 அடி சாலை எச்.பி.பெட்ரோல் பங்க் அருகில் உள்ள பூங்காவிற்கு, அதே பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் நடைபயிற்சிக்காகச் சென்றுள்ளார்.
அப்பொழுது அங்கு போதையில் வந்த ஐந்து இளைஞர்கள், மூதாட்டியைப் பலவந்தமாகப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அலறித் துடித்து மயங்கி விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, மூதாட்டி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரைச் சிகிச்சைக்காகச் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்துத் தகவல் அறிந்து வந்த வேளச்சேரி காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஐந்து பேர் கொண்ட போதை கும்பல் மூதாட்டியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக்கைப்பற்றிக் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 60 வயது மூதாட்டிக்கு நேர்ந்த இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ. 9 லட்சம் மோசடி செய்த தவெக நிர்வாகி : பணத்தை இழந்த முதியவர் விபரீத முடிவு - காவல்துறையின் அலட்சியம்!
-
“உடன்பிறப்பின் குரல் இணையதளத்தில் மே 31-க்குள் கருத்துகளை பதிவு செய்யவும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
“ஒவ்வொரு நாளும் ‘விஜய்’யின் அரிதாரம் கலைந்து கொண்டே வருகிறது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து - முதலமைச்சர் விஜய் கெஞ்சி இருப்பது மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது : அப்பாவு!
-
”பல்கலை. வேந்தராக முதலமைச்சர்.. திமுக-வின் சட்டப் போராட்டம்.. காங்கிரஸ் அமைச்சரின் அசட்டைப் பேச்சு”