Tamilnadu
சென்னையில் பயங்கரம் : நடைபயிற்சி சென்ற 60 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்!
சென்னை வேளச்சேரி 100 அடி சாலை எச்.பி.பெட்ரோல் பங்க் அருகில் உள்ள பூங்காவிற்கு, அதே பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் நடைபயிற்சிக்காகச் சென்றுள்ளார்.
அப்பொழுது அங்கு போதையில் வந்த ஐந்து இளைஞர்கள், மூதாட்டியைப் பலவந்தமாகப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அலறித் துடித்து மயங்கி விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, மூதாட்டி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரைச் சிகிச்சைக்காகச் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்துத் தகவல் அறிந்து வந்த வேளச்சேரி காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஐந்து பேர் கொண்ட போதை கும்பல் மூதாட்டியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக்கைப்பற்றிக் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 60 வயது மூதாட்டிக்கு நேர்ந்த இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!