Tamilnadu
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
சென்னை, கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த நூர் முகமது என்பவர், தனது வீட்டில் நகை காணாமல் போனது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், கொடுங்கையூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் (SI) தனசேகரன் விசாரணை மேற்கொண்டு வந்தார்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று நூர் முகமதுவின் வீட்டிற்கு உதவி ஆய்வாளர் தனசேகரன் சென்றுள்ளார்.அப்போது வீட்டில் இருந்த இளம் பெண்ணிடம் தனியாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி, அங்கிருந்த மற்ற அனைவரையும் அவர் வெளியே அனுப்பியுள்ளார்.
பின்னர் அந்தப் பெண்ணிடம், “நான் க்ரைம் எஸ்.ஐ., உண்மையைச் சொல்” எனக் கூறி அவரது கையைப் பிடித்துள்ளார். மேலும், “உன் கை வேர்க்கவில்லையே… நீ பயப்படவில்லையே… உன் உதடு உண்மையை பேசவில்லையே…” என்று கூறி, அப்பெண்ணின் உதட்டைத் தொட்டு அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.
அதுமட்டுமன்றி, அந்தப் பெண் அணிந்திருந்த புர்கா உடையுடன் புகைப்படம் எடுத்தவர், மீண்டும் புர்காவைக் கழற்றச் சொல்லி மற்றொரு புகைப்படமும் எடுத்துள்ளார். “இந்தப் புகைப்படம் என்னிடம் மட்டுமே இருக்கும்” எனக் கூறி, அப்பெண்ணிடம் கொச்சையாகப் பேசியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில், உயர் காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?
-
‘உரிமைத்தொகை’யால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்! : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்!
-
அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குழந்தை உரிமைகள் தேசிய ஆணையத்திற்கு சல்மா MP கடிதம்!
-
கரூர் விவகாரம் : ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் - சிபிஐக்கு திமுக புகார் மனு!
-
கரூர் வழக்கு முதல் அடிதடிகள் வரை ; அடுத்தடுத்து சிக்கும் த.வெ.க அமைச்சர்கள் : முரசொலி தலையங்கம்!