Tamilnadu
“மனிதநேயமிக்கவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : நடிகர் விஜய் ஆண்டனி புகழாரம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கொரட்டூரில் வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அம்பத்தூர் மண்டலக் குழுத் தலைவர் பி.கே. மூர்த்தி தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, பேராசிரியர் ஞானசம்பந்தம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
நடிகர் விஜய் ஆண்டனி "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளது. இதுவரை நான் அவரை நேரில் பார்த்ததில்லை; ஆனால், அவர் எந்த இடத்திலும் கடும் கோபத்துடனோ அல்லது முகம் சுளிக்கும் விதமாகவோ பேசி நான் பார்த்ததில்லை.
அவர் மிகவும் பண்பாகவும், அன்பாகவும் நடந்துகொள்பவர்; சிறந்த மனிதநேயமிக்கவர். முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவான இந்த மனிதநேய விழாவிற்கு என்னை அழைத்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.
பேராசிரியர் ஞானசம்பந்தம் "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி, மக்களின் ஆட்சியாக உள்ளது. அனைவரிடத்திலும் எளிமையாகவும் அன்பாகவும் பழகக்கூடியவராக முதலமைச்சர் இருக்கிறார்" எனத் தெரிவித்தார்.
Also Read
-
”இது நம்ம ஆட்டம் 2026”- மாநில அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய துணை முலமைச்சர் உதயநிதி
-
உலகளவில் முதன்முறையாக.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் கட்டப்பட்டு மேம்பாலம்! - அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!
-
சமூக நீதிக்கான சரித்திர நாயகர் : இந்திய அளவில் ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் முன்னேற்றம்!
-
என்ன சாதித்தார் காப்பி அடிக்க...? : எந்தக் கூச்சமும் இல்லாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்தான் பழனிசாமி!
-
46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள்... அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன?