Tamilnadu
கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் 23 தங்க பதக்கங்கள் பெற்ற மாணவர் : பாராட்டிய அமைச்சர் இராஜேந்திரன்!
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம், கோபாலபுரத்தில் அமைந்துள்ள சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கணக்குப்பிரிவில் எழுத்தராக பணியாற்றி வரும் கே.கே.இளங்கோ அவர்களின் மகனாகிய இ.எல்.அருணேஸ்வரன் அவர்கள், இளங்கலை கால்நடை மருத்துவ படிப்பை, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் 2018-2024 கல்வியாண்டில் பயின்றார்.
மேலும், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூலம் 24.01.2026 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 23 தங்க பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, எளிய பின்னணியில் இருந்து படித்து சாதனை படைத்த இ.எல்.அருணேஸ்வரன் அவர்களை பாராட்டும் வகையில் அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்கள் இன்றைய தினம் துறையின் சார்பாக அழைத்து பாராட்டுதலையும், வாழ்த்துகளையும் தெரிவித்து, அரூர் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மூலம் ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!