Tamilnadu
நேர்மையுடன் செயல்பட்ட தூய்மைப் பணியாளர் : நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் பத்மா, நேற்று சென்னை தியாகராய நகர், வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது 45 சவரன் தங்க நகைகளை கண்டெடுத்த அவர், உடனடியாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பிறருக்கு முன்மாதிரியாக திகழும் தூய்மைப் பணியாளர் பத்மாவை, தலைமைச் செயலகத்திற்கு அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். பத்மாவிற்கு சால்வை அணிவித்து சிறப்பித்த முதலமைச்சர், ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கி அவரின் நேர்மையை பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் ஜெயசீலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Also Read
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!