Tamilnadu
நேர்மையுடன் செயல்பட்ட தூய்மைப் பணியாளர் : நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் பத்மா, நேற்று சென்னை தியாகராய நகர், வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது 45 சவரன் தங்க நகைகளை கண்டெடுத்த அவர், உடனடியாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பிறருக்கு முன்மாதிரியாக திகழும் தூய்மைப் பணியாளர் பத்மாவை, தலைமைச் செயலகத்திற்கு அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். பத்மாவிற்கு சால்வை அணிவித்து சிறப்பித்த முதலமைச்சர், ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கி அவரின் நேர்மையை பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் ஜெயசீலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Also Read
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!