Tamilnadu
பிரபல கிரிக்கெட் வீரர் பெயரில் போலி Instagram கணக்கு : பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி - நடந்தது என்ன?
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் கீதா (38). இவர் கடந்த ஜூன் மாதம் இவரது இன்ஸ்டாகிராம் வலைதள கணக்கிற்கு தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் பெயரில் உள்ள கணக்கிலிருந்து நட்பு கோரிக்கை வந்துள்ளது.
இதையடுத்து, அவர் கணக்கை ஏற்றுக்கொண்டதை அடுத்து இருவரும் பேசி வந்துள்ளனர். பிறகு செல்போன் எண் பகிர்ந்து பேசி இருக்கிறார்கள். தன்னை தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் என அறிமுகப்படுத்தி கொண்டு, தனக்கு நிறைய செல்வாக்கு உள்ளது என கூறியுள்ளார்.
மேலும், உங்களுக்கு அரசு வேலை வாங்கி தரமுடியும் என்றும், அதற்கு Processing and Formalities செலவு ஆகும் என கூறி நம்ப வைத்ததின்பேரில், கீதா கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை பல தவணைகளாக ஜிபே மூலம் மொத்தம் ரூ.5,08,700 அனுப்பியுள்ளார்.
ஆனால் அந்த நபர் வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் அவர் மீது சந்தேகம் வந்த கீதா இது குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகார் மீது விரைந்து விசாரணை மேற்கொண்டு போது, போலி இன்ஸ்டாகிராம் ஐடி உருவாக்கி அரசு வேலை வாங்கி தருவதாக கீதாவை ஏமாற்றியது ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராகுல் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ராகுல் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் அவரை வேலையிலிருந்து நீக்கிள்ளனர்.
மேலும் அவருக்கு திருமணமும் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பிரபலங்கள் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் ஐ.டி.க்கள் உருவாக்கி, மேற்படி புகார்தாரரை ஏமாற்றி பணத்தை பெற்று திருமணத்தை நடத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
“இன்னொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதை அமெரிக்காவும் இஸ்ரேலும் எப்போது நிறுத்தும்?”: முரசொலி காட்டம்!
-
100 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
உலக தரத்தில் ரூ.20 கோடியில் ஆர்.கே.நகர் விளையாட்டு வளாகம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
பள்ளி கட்டடம் முதல் பேருந்து நிலையம் வரை : சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர்!
-
“இது எண்ணிக்கைக்கான கூட்டணி அல்ல! எண்ணத்தால் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!