Tamilnadu
பட்டியலின இளைஞர் கொலை : முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் - காங்கிரஸ்!
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில், பட்டியலின இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில், காங்கிரஸ் கட்சியின் பட்டியலின பிரிவு தலைவர் ராஜிந்தர் பால் கவுதம், நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மசூத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், கடந்த பத்து ஆண்டுகளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில், தலித்துக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை பல மடங்கு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினர். உத்தரப்பிரதேசம் உள்பட பாஜக ஆளும் 5 மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் 75 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளை சுட்டிக்காட்டிய அவர்கள், இதில், உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 26.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டனர்.
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில், அ ம்மாநில அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக குறிப்பிட்ட அவர்கள், தலித்துகள், பெண்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் பல மடங்கு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினர். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறி உத்தரப்பிரதேச மாநிலத்தில் புல்டோசர் கலாச்சாரம் நீடித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Also Read
-
மேகதாது அணை - ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!