Tamilnadu
'முதலில் வருபவருக்கே முன்னுரிமை'... புறநகர் ரயில்களில் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தெற்கு ரயில்வே!
புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகள், 'முதலில் வருபவருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும், என்றும், ரயிலில் ஏறாத மற்றவர்களுக்காக இருக்கைகளைப் பிடித்து வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை :
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், புறநகர் ரயில்களில் சக பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் மற்றும் பயணத்தின் ஒழுங்கைக் குலைக்கும் சில செயல்களைக் கவனித்துள்ளது. அந்த நிகழ்வுகள்:
* பயணிகள் எதிரே உள்ள காலி இருக்கைகளின் மீது தங்கள் கால்களை வைப்பதால், அந்த இருக்கைகள் மற்றவர்கள் பயன்படுத்த முடியாதவாறும் அசுத்தமானதாகவும் ஆகின்றன.
* ரயிலில் ஏறாத மற்றவர்களுக்காக இருக்கைகளைப் பிடித்து வைப்பது, தகுதியுள்ள மற்ற பயணிகளுக்கு இருக்கை கிடைக்காமல் செய்கிறது.
* ரயில் முனையங்களில் முழுமையாக நிற்பதற்கு முன்பே, இடம்பிடிப்பதற்காக ஓடும் ரயிலில் ஏறுவது, மற்றும் ரயிலில் இருந்து இறங்க முயற்சிக்கும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது.
* ரயில் பெட்டிகளின் நுழைவாயிலில் அமர்ந்து, மற்ற பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இடையூறாக இருப்பது.
இதுபோன்ற செயல்கள், குறிப்பாக இருக்கைகளுக்கான தேவை அதிகமாக இருக்கும் நெரிசல் மிகுந்த நேரங்களில், சக பயணிகளுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன.
பயணிகள் நினைவில் கொள்ள வேண்டியவை:
* புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகள், 'முதலில் வருபவருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.
* மற்றவர்களுக்காக இடம் பிடிப்பதும், இருக்கைகள் மீது கால்களை வைப்பதும் அனுமதிக்கப்படாத ஒன்றாகும். இது ரயில்வே விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
* ரயில் பெட்டி வாசல்களில் அமர்வதும், வழியை மறிப்பதும் பாதுகாப்பற்றது. இது சம்பந்தப்பட்ட பயணிக்கும் மற்ற பயணிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
* பாதுகாப்பான மற்றும் இனிமையான பயண அனுபவத்திற்காக, அனைத்து பயணிகளும் ரயில் பெட்டிகளுக்குள் நாகரிகத்தையும், தூய்மையையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இருக்கை வசதிகளைப் பொறுப்புடன் பயன்படுத்துமாறும், சக பயணிகளை மதித்து ஒத்துழைக்குமாறும் பயணம் செய்யும் பொதுமக்களை சென்னை கோட்டம் கேட்டுக்கொள்கிறது. அனைவருக்கும் வசதியான, பாதுகாப்பான மற்றும் பயணிகளுக்கு உகந்த பயண அனுபவத்தை உறுதி செய்ய, புறநகர் ரயில்களில் ஒழுங்கைப் பேணுவது மிகவும் அவசியம்.
Also Read
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!