Tamilnadu
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
பல்வேறு நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது என்றும், இதுவரை 77 சதவீத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வேலைவாய்ப்பையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்கிறது என்றும் அவர் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு இணையாக தென் மாவட்டங்களும் தொழில் வளர்ச்சியில் முன்னேறி வருகிறது என்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகளை ஒன்றிய அரசு வேறு பகுதிகளுக்கு திருப்பிவிடுகிறது என்று குற்றம்சாட்டிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, 2024 முதலீட்டாளர் மாநாட்டில் 631 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும், அவற்றில் 80 சதவீத ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். ஐரோப்பாவிலும் "TN Rising" மாநாடு நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!