Tamilnadu
”தவறான கருத்துக்களை பரப்பும் ஆளுநர் ஆர்.என்.ரவி” : செல்வப்பெருந்தகை கண்டனம்!
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று ஒன்றிய அரசே பாராட்டி இருக்கிறது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மைக்கு புறப்பான கருத்துக்களை பேசி வருகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கண்டித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப் பெருந்தகை,”பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று ஒன்றிய அரசே பாராட்டி இருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசின் பாராட்டிற்கு எதிராக
ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மைக்கு புறப்பான கருத்துக்களை பேசி வருகிறார். RSS அமைப்பின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்பட்டு, மதவாத சக்தியின் போதகராக தமிழ்நாட்டில் வளம் வருகிறார். தமிழ்நாட்டு மக்கள் ஆளுநரை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதேபோல் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. ஒன்றிய அரசே பாராட்டுகளை வழங்கி இருக்கிறது. உலகத்திலேயே உண்மைக்கு புறம்பாக பேசும் கட்சி பாஜக. அதில் ஒருவர் தான் ஆளுநர் ஆர்.என்.ரவி” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தோனி ஏன் மைதானத்திற்கு வருவதில்லை.. பயிற்சியாளர் மைக்கல் ஹசி சொன்ன காரணம்” : முழு விவரம் அறிக!
-
குமார ராணி முனைவர் மீனா முத்தையா மறைவு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பயணிகள் பயணம் : ஒரே நாளில் இவ்வளவு பேரா?- மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!
-
”கொத்தடிமை ஒழிப்பு நடவடிக்கை.. இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு”! - முழு விவரம்!
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!