Tamilnadu
79-வது சுதந்திர தினம் : சென்னை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
79 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்று காவல்துறை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் தேசியக் கொடியை ஏற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரையாற்றினார். இதையடுத்து தகைசால் தமிழர் விருதை பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு முதலமைச்சர் வழங்கினார். பிறகு டாக்டர் அப்துல் காலம் விருதை இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் முனைவர் வ.நாராயணனுக்கு வழங்கினார்.
மேலும் கல்பனா சாவ்லா விதை துளிசிமதி முருகசனுக்கும், முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை மருத்துவர் வி.பிரசண்ண குமார், ப.பாலகிருஸ்ணன், வீ.யமுனா, காகர்லா, பா.கணேசன், க.லட்சுமி பிரியா, த.ஆனந்த்,க க.சு.கந்தசாமி, மருத்துவர் இரா.செல்வராஜ், ஆர்.மோகன் ஆகியோருக்கு வழங்கினார்.
பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்ததற்காக மருத்துவர் குமரவேல் சண்முகசுந்தரம், குணசேகரன் ஜெகதீசன் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு விருதுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.
Also Read
-
திருப்பரங்குன்றம் விவகாரம் : ‘‘பியூஷ் கோயலின் ‘பியூஸ்’ போன வாதங்கள்...” - முரசொலி தலையங்கம்!
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!