Tamilnadu
”சுமூக தீர்வு கிடைக்கும்” : துப்புரவு பணியாளர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை சுமூகமாக முடிவுக் கொண்டு வரவேண்டும். அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிச்சயம் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு கிடைக்கும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ” சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தை சுமூகமாக முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார்.
வட மாநில தொழிலாளர்களை துப்புரவு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக கூறும் தகவல் தவறானது. துப்புரவு தொழிலாளர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிச்சயம் பேச்சு வார்த்தையில் சமூக தீர்வு கிடைக்கும்.
துப்பரவு பணியாளர்களை நான் சந்திக்கவில்லை என கூறுகிறார்கள். இது தவறான தகவல். போராடி வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து 4 முறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளேன். துப்புரவு பணியாளர்களை நிரந்தரப்படுத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"நமக்குள் இருக்கும் நட்பு தேர்தலுக்கானது அல்ல, கொள்கை நட்பு, இலட்சிய நட்பு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
B.Ed மாணாக்கர் சேர்க்கை ஆணை... எப்போது பதிவிறக்கம் செய்யலாம்? - அமைச்சர் கோவி.செழியன் கூறியது என்ன?
-
தாயுமானவர் திட்டம் : வயது முதிர்ந்தவர் இல்லங்களுக்கு நேரில் சென்று பொருட்களை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
நேரில் வந்த உயிரிழந்துவிட்டதாக நீக்கப்பட்ட பெண் வாக்காளர்- உச்சநீதிமன்றத்தில் அம்பலப்பட்ட தேர்தல் ஆணையம்!
-
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மடிக்கணினி... Dell, Acer ஆகிய நிறுவனங்கள் தேர்வு - முழு விவரம் உள்ளே !