Tamilnadu
2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த நடவடிக்கை என்ன? : அரசுக்கு கேள்வி எழுப்பிய கதிர் ஆனந்த் MP!
2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் 2032 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பனில் நடைபெற உள்ள அடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட அரசாங்கத்திடம் ஏதேனும் புதிய, சிறப்பு திட்டங்கள் மற்றும் பயிற்சி அட்டவணைகள் உள்ளதா என்று நாடாளுமன்றத்தில் வேலூர் தொகுதி திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் 2036ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக்கை நடத்த இந்தியா ஆர்வமாக உள்ளதா என்றும் அதற்காக அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட/எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
SC/ST பிரிவினருக்கான தேசிய தொழில் மையங்களின் செயல்பாடுகள் என்ன?
தமிழ்நாட்டில் செயல்படும் பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான (SC/ST) தேசிய தொழில் சேவை மையங்களின் (NCSC) எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை உறுப்பினர்கள் சி. என். அண்ணாதுரை மற்றும் ஜி. செல்வம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:
2022–23 மற்றும் 2023–24 நிதியாண்டுகளில் இந்த மையங்கள் மூலம் ஆலோசனை, பயிற்சி அல்லது பயிற்சி பெற்ற மொத்த SC/ST பயனாளிகளின் எண்ணிக்கை என்ன?
தமிழ்நாட்டின் மலைப்பகுதிகள் அல்லது பழங்குடிப் பகுதிகளில் உள்ள பட்டியல் பழங்குடி சமூகங்களுக்காக இந்த மையங்களின் செயல்பாடுகளுக்கு உள்ள இலக்குகள் என்ன?
தமிழ்நாட்டில் இந்த மையங்கள் மூலம் பதிவுசெய்யப்பட்ட, பயிற்சி பெற்ற, வேலை பெற்ற மற்றும் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையின் விவரங்கள் என்ன?
தமிழ்நாட்டில் இந்த மையங்களை விரிவுபடுத்த அல்லது மேம்படுத்த அரசாங்கத்திற்கு ஏதேனும் திட்டங்கள் உள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!