Tamilnadu
மகளிர் விடியல் பயணம் : MTC பேருந்துகளில் 139 கோடி முறை பயணம் செய்த மகளிர்... விவரம் உள்ளே !
தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்டதும் பெண்களது வாழ்வில் வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் விடியல் பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்த திட்டம் அமல்படுத்தியதை அடுத்து பெண்கள் இலவசமாக மகிழ்ச்சியாக பேருந்துகளில் சென்று வருகிறார்கள். இத்திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து சாதாரண கட்டண பேருந்துகளில் பயணிக்கும் மகளிர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் மாநகர் போக்குவரத்துக்கு கழக பேருந்துகளில் 31.05.2025 வரை 139 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் விடியல் பயண பேருந்துகளில் பயணிக்கும் மகளிர் பயணிகளின் எண்ணிக்கை தொடந்து அதிகரித்து வருகிறது.
சென்ற வருடம் மே மாதத்தில் சராசரியாக நாள் ஒன்றிற்கு 9.54 லட்சமாக இருந்த மகளிர் பயணம் இந்த வருடம் மே மாதத்தில் மேலும் 21% அதிகரித்து தற்போது நாள் ஒன்றிற்கு 12.06 லட்சம் மகளிர் பயணம் செய்து பயனடைந்து வருகின்றனர்.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!