Tamilnadu
”வயிற்றெரிச்சலில் பேசும் எடப்பாடி பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!
சென்னை சவுகார்பேட்டை மற்றும் பாரிமுனையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு விதி வீதியாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,"பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியை கொடுத்துள்ளது இந்த கழக அரசு. முந்தைய அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி வழக்கு குற்றவாளிகளை பாதுகாக்கவே பார்த்தார்கள். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியதன் காரணமாகதான் இந்த வழக்கை அதிமுக அரசு சிபிஐக்கு மாற்றியது.
இந்த தீர்ப்பு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகும். இந்த வழக்கி திமுக அரசு உரிய தீர்ப்பை பெற்று கொடுத்தன் காரணமாக பெண்கள் அனைவரும் கழக அரசை பாராட்டி வருகின்றனர். இதன் வயிற்று எரிச்சல் காரணமாகதான் எடப்படி பழனிசாமி அவதூறுகளை பேசி வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வே இல்லாமல் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார். நீலகிரியில் அரசு பள்ளி, மருத்துவமனையில் ஆய்வு செய்தார். மேலும் யானை முகாம்களில் நடத்தக்கூடிய பணிகளை ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார்.எங்கள் முதலமைச்சருக்கு நாட்டில் நடக்கும் அனைத்து விவரங்களையும், விரல் நுனியில் வைத்திருப்பார். எடப்பாடி பழனிசாமியை போல் நான் டி.வியை பார்த்து தெரிந்து கொண்டேன் என கூறமாட்டார்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"திராவிட மாடல் ஆட்சியில் கோயம்புத்தூர், மதுரை IT நகரங்களாக உருப்பெறுகிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
இனி பேரிடர் குறித்து கவலையில்லை... நாசாவுடன் சேர்ந்த இஸ்ரோ : விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள் !
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் : "நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும்" - உச்சநீதிமன்றம் கருத்து !
-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 6,000 பேருக்கு கடனுதவி : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
-
ரஷ்யாவில் நிலநடுக்கம் : 12 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை - இந்தியாவை தாக்குமா?