Tamilnadu
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளியை பாதுகாத்த அ.தி.மு.க : வெளியான அதிர்ச்சி தகவல்!
கோவை பொள்ளாச்சியில் 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இந்த விவகாரத்தை கண்டும் காணாமல் இருந்து வந்தது. பின்னர் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் பொள்ளாச்சி கொடூரத்தை கண்டித்து போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தனர்.
ஏன் பொள்ளாச்சி பகுதியிலேயே திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்படியான அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாத அப்போதைய அதிமுக அரசு வேறுவழி இல்லாமல் வழக்கை பதிவு செய்தது.
பின்னர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பொள்ளாச்சியை சேர்ந்த சபரி ராஜன் திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹிரண்பால், பாபு மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை போலிஸார் கைது செய்தனர். இதில் அருளானந்தம், பொள்ளாச்சி நகர மாணவர் அணிச் செயலாளராக இருந்துள்ளார்.
இப்படி ஒரு கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கட்சியில் இருந்து உடனே நீக்காமல், 2 ஆண்டுகளாக அவரை கட்சியில் வைத்து அ.தி.மு.க பாதுகாத்து வந்துள்ளது. தற்போது இதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் 12-02-2019 அன்று முதல் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் பொள்ளாச்சி நகர மாணவர் அணிச் செயலாளராக இருந்த அருளாநந்தம் 6-01-2021 அன்றுதான் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக பாலியல் குற்றவாளியை அ.தி.மு.க பாதுகாத்து வந்துள்ளது இதன் மூலம் உண்மையாகியுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
த.வெ.க அரசு என்ன டாஷ் பண்ணிட்டு... : பழனி கோயில் நிலம் குறைகேடு விவகாரம் - DMK IT WING கண்டனம்!
-
மலையடிப்பட்டி அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!
-
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவலம் : ஒரே படுக்கையில் 4 நோயாளிகளுக்குச் சிகிச்சை!
-
‘தான் திருடி, பிறரை நம்பாள்..’ - களவாணித்தனத்தால் ஆட்சி நடத்தும் விஜய்.. பட்டியலிட்டு முரசொலி பதிலடி!
-
மூடப்பட்ட 5 அரசுப்பள்ளிகள்.. சேர்க்கை இல்லை என காரணம் கூறிய அரசு.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் நிலை!