Tamilnadu
“சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உட்கட்டமைப்பிற்கு ரூ.2.50 கோடி நிதி!” : துணை முதலமைச்சர் அறிவிப்பு!
சென்னை பத்திரிகையாளர் மன்றம், இந்தியன் ஆயில் இணைந்து நடத்திய பத்திரிகையாளர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கும் விழா சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
அப்போது, விழா மேடையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸ்டாலின், “ஒரு பத்திரிகையின் பதிப்பாளர் என்கிற அடிப்படையில் பத்திரிகையாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பெருமைக்குரியதாய் அமைந்துள்ளது.
திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு, அதன் மூலமாக 11 லட்சம் ரூபாய் இதுவரை வழங்கியிருக்கின்றோம். பத்திரிகையாளர் ஓய்வூதியத்தை ரூ.12,000ஆக உயர்த்தியுள்ளோம், பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி கொடுத்து வருகிறோம்.
கொரோனா நேரத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு, மொத்தமாக 2.40 கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணி செய்த சுமார் 6,000 பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக, சுமார் 2.89 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இவை தவிர, கட்டணமில்லா பேருந்து பயணம், செய்தியாளர் அங்கீகார அட்டை போன்ற ஏராளமான திட்டங்களை அரசு சார்பாக, பத்திரிகையாளர்களுக்கு வழங்கி வருகிறோம்.
அவ்வகையில், தற்போது பத்திரிகையாளர் மன்றத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, அரசு சார்பாக 2 கோடி 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இங்கு அறிவிக்கின்றேன்” என்றார்.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!