Tamilnadu
”இரட்டை வேடம் போடுவதில் அ.தி.மு.க-விற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று புளியந்தோப்பு நேரு நகரில் ’அன்னம் தரும் அமுதக்கரங்கள்’ ஏழை எளிய மக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு காலை உணவு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,”திராவிட மாடல் அரசின் மீது பழி சுமத்த ஏதாவது கிடைக்காதா என்று இலவு காத்த கிளி போல் காத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இறந்தவர்களை வைத்து அவர் அரசியல் செய்வது கண்டனத்துக்குறியது. இதுபோன்ற தரம் தாழ்ந்த மலிவான அரசியல் செய்வதை எடப்பாடி பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும்.
திருச்செந்தூர் கோவிலில் எந்தவிதமான கூட்ட நெரிசலும் இல்லை. சுவாசப் பிரச்சனை காரணமாகவே தனது கணவர் உயிரிழந்தார் என அவரது மனைவி கூறியுள்ளார். இறந்தவர்களை வைத்து அவர் அரசியல் செய்ய வேண்டாம். அவர்களுக்கு உதவி செய்யுங்கள். தேவையில்லாமல் அவதூறுகளை பரப்புவதையே வாடிக்கையாக வைத்துள்ளது அதிமுக.
தொட்டிலையும் ஆட்டுவோம் பிள்ளையையும் கிள்ளுவோம் என்பதுபோல் உள்ளது அதிமுகவின் நிலைபாடு. இரட்டை வேடம் போடுவதில் அ.தி.மு.கவிற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!