Tamilnadu
குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு! : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்!
2024-ம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு மார்ச் 28-ஆம் நாள் வெளியான நிலையில், 90 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு ஜூலை 13-ஆம் நாள் நடத்தப்பட்டது. இத்தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதினர்.
1.59 லட்சம் பேர் எழுதிய முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் கடந்த செப்டம்பர் 2ஆம் நாள் வெளியானது. அதில் 1,988 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வுக்கு தகுதிபெற்றனர்.
இந்நிலையில், தகுதிபெற்ற தேர்வர்களுக்கு 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 முதல் 13ஆம் நாள் வரை முதன்மைத் தேர்வு நடைபெற்றது. அதற்கான முடிவுகளை நேற்று (மார்ச் 14) இரவு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இம்முடிவுகளில் சுமார் 190 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Physical Certificate Verification and Oral Test) வரும் ஏப்ரல் 7 முதல் 9 ஆம் நாள் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!