Tamilnadu
குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு! : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்!
2024-ம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு மார்ச் 28-ஆம் நாள் வெளியான நிலையில், 90 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு ஜூலை 13-ஆம் நாள் நடத்தப்பட்டது. இத்தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதினர்.
1.59 லட்சம் பேர் எழுதிய முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் கடந்த செப்டம்பர் 2ஆம் நாள் வெளியானது. அதில் 1,988 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வுக்கு தகுதிபெற்றனர்.
இந்நிலையில், தகுதிபெற்ற தேர்வர்களுக்கு 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 முதல் 13ஆம் நாள் வரை முதன்மைத் தேர்வு நடைபெற்றது. அதற்கான முடிவுகளை நேற்று (மார்ச் 14) இரவு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இம்முடிவுகளில் சுமார் 190 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Physical Certificate Verification and Oral Test) வரும் ஏப்ரல் 7 முதல் 9 ஆம் நாள் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!