Tamilnadu
எல்லார்க்கும் எல்லாம் : தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை - பேரவையில் தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு!
இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
இக்கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இவர் நிதியமைச்சராக பொறுப்பேற்று இரண்டாவது முறையாக தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வாசித்து வருகிறார்.
இதற்கு முன்னதாக பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை செலுத்தினார்.
இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு நேற்று மாநில திட்டக்குழு தயாரித்த 2024-25 பொருளாதார ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதில் 2024-25 இல் 8% அல்லது அதற்கு மேல் வளர்ச்சியை தமிழ்நாடு தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நலன்களுக்கும் பல தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கியதில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் திராவிட மாடல் அரசு முதன் முதலாக ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25’- வெளியிட்டு சாதனையை நிகழ்த்தியுள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!