Tamilnadu
”ஜெயக்குமாருக்கு சுயமரியாதை அறவே பிடிக்காது” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு, ஆட்சியில் இருந்தபோதும் சரி, தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி அடிமையாக இருந்து வருகிறது அ.தி.மு.க. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக பேசாமல், வாய்மூடி கிடக்கிறார்கள். இப்போது கூட தங்களது எஜமானவர்கள் பா.ஜ.கவிற்கு விசுவாசமாகவே அதிமுக இருந்து வருகிறது.
இந்நிலையில், அ.தி.மு.கவிற்கும், ஜெயக்குமாருக்கும் சுயமரியாதை என்பது அறவே பிடிக்காது ஒன்று என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு," பா.ஜ.கவிற்கு முழுமையாக அடமானம் வைத்த அதிமுக ஒன்றிய அரசுக்கு லாவணி பாடுவதையே வழக்கமாக கொண்டுள்ளது. அதிமுகவிற்கும் ஜெயகுமாருக்கும் சுயமரியாதை என்பது அறவே பிடிக்காத ஒன்று.
ஆனால் இவர்களை போல் அடிமைகள் அல்ல நாங்கள். ஒன்றிய அரசுக்கு சிம்ம சொப்பனமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். திராவிட மாடல் அரசின் துணிச்சலான நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தமிழ்நாட்டில் இந்த இருமல் மருந்தின் உரிமங்கள் முழுமையாக ரத்து” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!
-
“‘சுயமரியாதை’ என்ற சொல்லே அனைவருக்கும் வேண்டிய சொல்! வெல்லும் சொல்!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தமிழ்நாடு எதற்கெல்லாம் போராடும்... ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி !
-
கரூருக்கு முன்னர் நாமக்கல்லில் ஏற்பட்ட பெரிய அசம்பாவிதம்- கள அனுபவத்தை விவரிக்கும் பேரா.பெருமாள்முருகன்!
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!