Tamilnadu
”ஜெயக்குமாருக்கு சுயமரியாதை அறவே பிடிக்காது” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு, ஆட்சியில் இருந்தபோதும் சரி, தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி அடிமையாக இருந்து வருகிறது அ.தி.மு.க. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக பேசாமல், வாய்மூடி கிடக்கிறார்கள். இப்போது கூட தங்களது எஜமானவர்கள் பா.ஜ.கவிற்கு விசுவாசமாகவே அதிமுக இருந்து வருகிறது.
இந்நிலையில், அ.தி.மு.கவிற்கும், ஜெயக்குமாருக்கும் சுயமரியாதை என்பது அறவே பிடிக்காது ஒன்று என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு," பா.ஜ.கவிற்கு முழுமையாக அடமானம் வைத்த அதிமுக ஒன்றிய அரசுக்கு லாவணி பாடுவதையே வழக்கமாக கொண்டுள்ளது. அதிமுகவிற்கும் ஜெயகுமாருக்கும் சுயமரியாதை என்பது அறவே பிடிக்காத ஒன்று.
ஆனால் இவர்களை போல் அடிமைகள் அல்ல நாங்கள். ஒன்றிய அரசுக்கு சிம்ம சொப்பனமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். திராவிட மாடல் அரசின் துணிச்சலான நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!