Tamilnadu
”திராவிடர் நீதி நூல் திருக்குறள்” : தமிழச்சி தங்கபாண்டியன் MP பேச்சு!
சென்னை, குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் உள்ள ஜெயின் பப்ளிக் என்ற தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளூவர் சிலையை தமிழச்சி தங்கபாண்டியன் MP திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன் MP ”ஒவ்வொரு திராவிடர் கையிலும் இருக்க வேண்டிய நூல் திருக்குறள். திராவிடர் நீதி திருக்குறள் என்று சொன்னவர் பெரியார்.
ஒவ்வொரு நாளும் திருக்குறளையும், திருவள்ளுவரையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும். திருவள்ளுவர் சிலையை நிறுவியதோடு தந்தை பெரியாரையும் அவரது புகழையும் பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளவதற்கு வழிவகை செய்துள்ள பள்ளி நிர்வாகத்திற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திருக்குறள்களை இசையமைத்து பாடலாக பாடிய மாணவர்களுக்கும் எனது பாராட்டுகள்” என தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு, தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சிபிஎஸ்சி பள்ளியில் தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!