Tamilnadu
”திராவிடர் நீதி நூல் திருக்குறள்” : தமிழச்சி தங்கபாண்டியன் MP பேச்சு!
சென்னை, குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் உள்ள ஜெயின் பப்ளிக் என்ற தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளூவர் சிலையை தமிழச்சி தங்கபாண்டியன் MP திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன் MP ”ஒவ்வொரு திராவிடர் கையிலும் இருக்க வேண்டிய நூல் திருக்குறள். திராவிடர் நீதி திருக்குறள் என்று சொன்னவர் பெரியார்.
ஒவ்வொரு நாளும் திருக்குறளையும், திருவள்ளுவரையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும். திருவள்ளுவர் சிலையை நிறுவியதோடு தந்தை பெரியாரையும் அவரது புகழையும் பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளவதற்கு வழிவகை செய்துள்ள பள்ளி நிர்வாகத்திற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திருக்குறள்களை இசையமைத்து பாடலாக பாடிய மாணவர்களுக்கும் எனது பாராட்டுகள்” என தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு, தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சிபிஎஸ்சி பள்ளியில் தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!