Tamilnadu
காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது : சுட்டுப்பிடித்து காவல்துறையினர் அதிரடி !
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தின் மீது நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் இருவர் முகமூடி அணிந்து கொண்டு வந்து பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா நேரில் வந்து ஆய்வு செய்தார். அதோடு இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
பின்னர் போலிசாரின் விசாரணையில் சிப்காட் பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை பிடிக்க போலிசார் அவர் இருக்கும் இடத்துக்கு விரைந்துள்ளனர்.
அப்போது சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை ஹரி கத்தியால் தாக்க வந்துள்ளார். அப்போது உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரன் வரை காலுக்கு கீழ் முட்டி பகுதியில் சுட்டு பிடித்து கைது செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஹரியை வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலிசார் அனுமதித்தனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!