Tamilnadu
குடியரசு தின விழா : ஆளுநர் முன்பு கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாடு அரசின் சாதனை ஊர்திகள்!
நாடு முழுவதும் இன்று 76-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், ராணுவம், கடற்படை, விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, வீர தீரச் செயலுக்கான அண்ணா பாதக்கம் விருது, கோட்டை அமீர்மத நல்லிணக்க விருது, சி.நாராயணசாமி நாயுடு விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் விருது, சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருதுகளை, முதலமைச் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பஞ்சாப், காஷ்மீர் மாநிலங்களி பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் அரங்கறப்பட்டன. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க அலங்கார ஊர்த்திகள் அணிவகுத்து சென்றனர்.
இதில் பள்ளிகல்வித்துறை, விளையாட்டுத்துறை, இந்துசமய அறநிலையத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் சாதனைகளை விளக்கி கம்பீரமாக அலங்கார ஊர்த்திகள் அணிவகுத்து சென்றன.
Also Read
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!