Tamilnadu
குடியரசு தின விழா : ஆளுநர் முன்பு கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாடு அரசின் சாதனை ஊர்திகள்!
நாடு முழுவதும் இன்று 76-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், ராணுவம், கடற்படை, விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, வீர தீரச் செயலுக்கான அண்ணா பாதக்கம் விருது, கோட்டை அமீர்மத நல்லிணக்க விருது, சி.நாராயணசாமி நாயுடு விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் விருது, சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருதுகளை, முதலமைச் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பஞ்சாப், காஷ்மீர் மாநிலங்களி பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் அரங்கறப்பட்டன. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க அலங்கார ஊர்த்திகள் அணிவகுத்து சென்றனர்.
இதில் பள்ளிகல்வித்துறை, விளையாட்டுத்துறை, இந்துசமய அறநிலையத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் சாதனைகளை விளக்கி கம்பீரமாக அலங்கார ஊர்த்திகள் அணிவகுத்து சென்றன.
Also Read
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!