Tamilnadu
குடியரசு தின விழா : ஆளுநர் முன்பு கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாடு அரசின் சாதனை ஊர்திகள்!
நாடு முழுவதும் இன்று 76-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், ராணுவம், கடற்படை, விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, வீர தீரச் செயலுக்கான அண்ணா பாதக்கம் விருது, கோட்டை அமீர்மத நல்லிணக்க விருது, சி.நாராயணசாமி நாயுடு விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் விருது, சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருதுகளை, முதலமைச் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பஞ்சாப், காஷ்மீர் மாநிலங்களி பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் அரங்கறப்பட்டன. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க அலங்கார ஊர்த்திகள் அணிவகுத்து சென்றனர்.
இதில் பள்ளிகல்வித்துறை, விளையாட்டுத்துறை, இந்துசமய அறநிலையத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் சாதனைகளை விளக்கி கம்பீரமாக அலங்கார ஊர்த்திகள் அணிவகுத்து சென்றன.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!