Tamilnadu
நீலகிரி - குன்னூரில் மண் சரிவு! : மீட்புப்பணி திவிரம்!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று (நவம்பர் 2) இரவு பெய்த கனமழையுடன் கூடிய காற்று வீசியதால் மண் சரிவு ஏற்பட்டு, ஆங்காங்கே வேரோடு மரங்கள் சாய்ந்தன.
இதனால், இரவு முதலே சாலை வழி போக்குவரத்து, ரயில் வழி போக்குவரத்து தடைபட்டது. இந்நிலையில், இரவு முழுவதும் நிறுத்தப்பட்டிருந்து சாலை போக்குவரத்து, அதிகாலையில் நடந்த மீட்புப்பணிகளுக்கு பின் மீண்டும் அனுமதிக்கப்பட்டது.
காந்திபுரம், டைகர்ஹில் வண்டிச்சோலை, சேலாஸ் சாலைகளில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன. மண் சரிவு ஏற்பட்ட இடங்களில், மண்ணிற்குள் சிக்கிய தனியார் வாகனங்களை, ஜே.சி.பி இயந்திரங்களை கொண்டு மீட்கும் பணியும் நிறைவடைந்துள்ளது.
இதனிடையே, மண் சரிவினால் தொடர்வண்டி பாதைகளில் உருண்டோடிய கற்பாறைகளும் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இன்று ஒரு நாள் மட்டும், மேட்டுப்பாளையம் - உதகை தொடர்வண்டி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஒரே இரவில் அதிகபட்சமாக, கீழ் கோத்தகிரியில் 14.3 செ.மீட்டர் மழையும், கோத்தகிரியில் 13.8 செ.மீட்டர் மழையும், பர்லியார் பகுதியில் 12.3 செ.மீட்டர் மழையும், குன்னூரில் 10.5 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Also Read
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
Re-entry கொடுத்த ஆதிரை: BB வீட்டிற்குள் யார் best ஆண்களா? பெண்களா? போட்டி போட்டு விளையாடும் housemates!
-
திருக்கார்த்திகை தீபத்திருவிழா : பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!