Tamilnadu
நீலகிரி - குன்னூரில் மண் சரிவு! : மீட்புப்பணி திவிரம்!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று (நவம்பர் 2) இரவு பெய்த கனமழையுடன் கூடிய காற்று வீசியதால் மண் சரிவு ஏற்பட்டு, ஆங்காங்கே வேரோடு மரங்கள் சாய்ந்தன.
இதனால், இரவு முதலே சாலை வழி போக்குவரத்து, ரயில் வழி போக்குவரத்து தடைபட்டது. இந்நிலையில், இரவு முழுவதும் நிறுத்தப்பட்டிருந்து சாலை போக்குவரத்து, அதிகாலையில் நடந்த மீட்புப்பணிகளுக்கு பின் மீண்டும் அனுமதிக்கப்பட்டது.
காந்திபுரம், டைகர்ஹில் வண்டிச்சோலை, சேலாஸ் சாலைகளில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன. மண் சரிவு ஏற்பட்ட இடங்களில், மண்ணிற்குள் சிக்கிய தனியார் வாகனங்களை, ஜே.சி.பி இயந்திரங்களை கொண்டு மீட்கும் பணியும் நிறைவடைந்துள்ளது.
இதனிடையே, மண் சரிவினால் தொடர்வண்டி பாதைகளில் உருண்டோடிய கற்பாறைகளும் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இன்று ஒரு நாள் மட்டும், மேட்டுப்பாளையம் - உதகை தொடர்வண்டி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஒரே இரவில் அதிகபட்சமாக, கீழ் கோத்தகிரியில் 14.3 செ.மீட்டர் மழையும், கோத்தகிரியில் 13.8 செ.மீட்டர் மழையும், பர்லியார் பகுதியில் 12.3 செ.மீட்டர் மழையும், குன்னூரில் 10.5 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!