Tamilnadu
திக்.. திக்.. 2 மணி நேரம் : திருச்சி விமான நிலையத்தில் பதற்றம் - நடந்தது என்ன?
திருச்சி விமான நிலையத்திலிருந்து இன்று மாலை 144 பயணிகளுடன் சார்ஜாவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த விமானி உடனே திருச்சி விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். பிறகு விமானம் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் விமானத்தை உடனே தரையிறக்க பிரச்சனைகள் இருந்தது. இதனால் கிட்டத்தட்ட 2 மணி நேரமாக, 26 முறை விமானம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது.
மேலும், விமானம் தரையிறங்கியவுடன், பயணிகளுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்கான 20க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அதேபோல், விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைக்க தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து விமானத்தை எப்படி தரையிறக்குவது என்று கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானியுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் விமானத்தை தரையில் உரசி இறக்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன் படி விமானம் தரையில் உரசி பத்திரமாக தரையிறங்கியது. எரிபொருளை குறைத்து விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய பெண் விமானி ஃபெலிசா டேனியலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
விமானம் தரையிறங்கியபோது கரும்புகை எழுந்தது. இந்நிலையில் விமானம் தரையிறங்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
மலையடிப்பட்டி அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!
-
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவலம் : ஒரே படுக்கையில் 4 நோயாளிகளுக்குச் சிகிச்சை!
-
‘தான் திருடி, பிறரை நம்பாள்..’ - களவாணித்தனத்தால் ஆட்சி நடத்தும் விஜய்.. பட்டியலிட்டு முரசொலி பதிலடி!
-
மூடப்பட்ட 5 அரசுப்பள்ளிகள்.. சேர்க்கை இல்லை என காரணம் கூறிய அரசு.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் நிலை!
-
‘டெல்லிக்கு அடிபணியும் தவெக அரசு… முதுகெலும்பற்ற கோழை முதல்வர் விஜய்’ : திமுக IT Wing கடும் விமர்சனம்!