Tamilnadu
”மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றும் திராவிட மாடல் அரசு” : அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர் ங்கம் தென்னரசு, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு கல்வித்துறையில் ஒரு மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 44 ஆயிரம் கோடிக்கு மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தில் நாட்டம் கொண்ட அரசாக இந்த அரசு இருக்கின்றது. ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் கல்வியும் சுகாதாரமும் முக்கியமாக இருக்க வேண்டும் அதன்படி இந்த அரசு கல்விக்கும் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.
பள்ளிப்படிப்பை முடித்து மாணவிகள் உயர் கல்விக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காக புதுமைப் பெண் என்ற திட்டத்தை கொண்டு வந்து மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தையும் அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மாணவர்களின் எதிர்கால கனவுகளை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!