Tamilnadu
’மோசமான பேச்சு’ : அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாக பேசியிருந்தார். இது தொடர்பாக தி.மு.க பிரமுகர் அளித்த புகாரின் அடிப்படையில், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன.
இதேபோல, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும் சி.வி. சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து திண்டிவனம் மற்றும் விழுபுரம் நகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி சி.வி. சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ”சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான்.அவரது பேச்சை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை" என கண்டித்தார். இதையடுத்து, முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது மற்றும் போராட்டம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!