Tamilnadu
திருநங்கை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ. 1 லட்சம் மானியம் : பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாளான நேற்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது. பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சி.வி. கணேசன், 12 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
1.தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1000 பெண், திருநங்கை ஓட்டுநர்களுக்கு புதிதாக ஆட்டோ வாகனம் வாங்கும் செலவினத்தில் ரூ. 1 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
2.பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி ரூ.24.90 லட்சம் செலவில் வழங்கப்படும்.
3. தொழிற்சாலைகளில் பயன்பாட்டில் உள்ள நவீன தொழில்நுட்ப யுத்திகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக ரூ.15 லட்சம் செலவில் பயிற்சி வழங்கப்படும்.
4.தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்களுக்கு ரூ.29.65 லட்சம் செலவில் மடிக்கணினிகள் வழங்கப்படும்.
5.தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் நிர்வாக அலுவலகம் மற்றும் கணினி தொடர்பான வசதிகள் மேம்படுத்தப்படும்.
6.புதியதாக வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகள் மற்றும் பிற தொழில் வாய்ப்புகள் குறித்து ஊடாடல் காணொலி காட்சிப்பதிவுகள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்படும்.
7. 32 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள வகுப்பறைகளில் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வசதி ரூ.10.11 லட்சம் செலவில் ஏற்படுத்தி தரப்படும்.
8. அரசு தொழிற்பயிற்சி நிலைய விடுதிகளில் ரூ.92 லட்சம் செலவில் நூலகங்கள் அமைக்கப்படும்.
9. தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் நவீன தொழில் நுட்பங்களில் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படும்.
10.குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதற்கு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி வசதிகள் செய்து தரப்படும்.
11. தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் வழங்கப்படும் பயிற்சி கட்டணம் விரைவாக வழங்ககுவதற்காக இணையதள வசதி வருவாக்கப்படும்.
12. தனியார் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!