Tamilnadu
"அனைவரின் கைகளில் தவழ வேண்டிய நூல்" - கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலரை குறிப்பிட்டு முதலமைச்சர் நெகிழ்ச்சி !
தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை இருந்தவரும், நவீன தமிழ்நாடை உருவாக்கிஅதன் சிற்பியாக விளங்கியவருமான முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆவது பிறந்த நாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு சென்னை மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் 3 தொகுப்புகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்டார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், " முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருவாழ்வையும் தொண்டையும் சொல்லும் “தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் 2024” என்ற நூலை உருவாக்கியுள்ளது. இந்தப் புத்தகம் உங்கள் கைகளில் தவழ வேண்டும்! அதிலுள்ள கருத்துகள் நெஞ்சில் நிலைக்க வேண்டும்!
தொட்ட துறைகளில் எல்லாம் துலங்கிய தலைவர் கலைஞரின் பெருவாழ்வைப் போற்றும் வகையில், தமிழ்நாட்டின் பல்துறை ஆளுமைகளின் பங்களிப்புடன் கலைஞர் நூற்றாண்டு நினைவு மலரினை மூன்று தொகுதிகளாகத் தயாரித்துள்ளது செய்தி மக்கள் தொடர்புத் துறை.
இம்மலரை வெளியிட்டு, செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைத்துள்ள ‘கலைஞர் நூற்றாண்டு நிறைவு நினைவலைகள்’ புகைப்படக் கண்காட்சியையும் பார்வையிட்டுத் தமிழினத் தலைவரின் நினைவுகளில் மூழ்கினேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
மீண்டும் தி.மு.க ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : உறுதிபடுத்திய ABP நாடு கருத்துக்கணிப்பு!
-
“தொகுதி மறுவரையறை பா.ஜ.க-வின் அரசின் அரசியல் சதித் திட்டம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!
-
🔴LIVE : சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம் – கேரளம், புதுச்சேரி, அசாம் வாக்குப்பதிவு நிலவரம்!
-
குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை தந்துவிட்டது : அப்போ எடப்பாடி பழனிசாமிக்கு? - முரசொலி தலையங்கம்!
-
“தரம்கெட்டுப் பேசும் பழனிசாமிக்கு மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!