Tamilnadu
”மோடிக்கு துணைபோகிறதா தேர்தல் ஆணையம்?” : சந்தேகம் எழுப்பும் டி.ராஜா!
"தேர்தல் ஆணையம் இன்றைக்கு சுதந்திரமாக செயல்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. பிரதமர் மோடியின் மத ரீதியான பேச்சை கண்டிப்பதற்கு பதில் ஜே.பி நட்டாவுக்கு கடிதம் எழுதுகிறது தேர்தல் ஆணையம். இது தேர்தல் ஆணையம் நடுநிலையோதான் செயல்படுகிறதா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது." என CPI பொதுச் செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா, ”இன்றைக்கு தேர்தல் ஆணையம் அரசியல் சட்ட நெறிகளுக்கு உட்பட்டு செயல்படுகிற ஒரு நேர்மையான ஆணையமாக இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
பிரதமர் மோடியின் மத ரீதியான பேச்சை கண்டிப்பதற்கு பதில் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதுகிறது. இதனால் தேர்தல் ஆணையம் சுதந்திராமாக செயல்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும் இந்தியா முழுவதும் பா.ஜ.கவுக்கு எதிரான மனநிலையே உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும் முடிவுகள் பா.ஜ.கவுக்கு எதிரானதாக இருக்கும். இந்த தேர்தலில் பா.ஜ.க அரசு அகற்றப்பட்டு இந்திய கூட்டணி ஆட்சியை அமைக்கும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... மவுனம் காக்கும் தவெக அரசு; விளாசிய உதயநிதி ஸ்டாலின்!
-
“திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயமா?; தவெக அரசு வேடிக்கைப் பார்க்கலாமா?”: ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
சிங்கப்பெண் அதிரடிப்படையில் தேர்வான பெண் காவலருக்கு டார்ச்சர்? - இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார்!
-
”கூடிய ’GenZ DMK’ கொள்கைக் கூட்டம்.. தைரியமாக களமாடுங்கள் திமுக உங்களுடன் என தெம்பூட்டிய கழக சட்டத்துறை”
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!