Tamilnadu
போதைப் பொருட்களை பதுக்கிய அதிமுக ஜெயக்குமாரின் உறவினர் கைது : போலிஸ் அதிரடி!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த காதர் மொய்தீன், 8 கிராம் மெத்தபெட்டமின் போதைப் பொருள் வைத்திருந்ததை அடுத்து தனிப்படை போலிஸார் அவரை கைது செய்தனர்.
பிறகு கைது செய்யப்பட்ட காதர் மொய் தீனிடம் நடத்திய விசாரணையில், சென்னை திருவல்லிக்கேணி சுல்தான் என்பவரின் வாட்ஸ் அப் குழுவில் தாம் இருப்பதாகவும், அதன் மூலமாகத்தான் போதைப் பொருள் வாங்கியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின்னர், சுல்தான் அலாவுதீன் என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது தான் திருவான்மியூரைச் சேர்ந்த ராகுல் என்பவரிடம் மொத்தமாகப் போதைப் பொருள் வாங்கிய தெரியவந்தது.
இந்த தகவலின் அடிப்படையில் திருவான்மியூர் பகுதிக்குச் சென்ற தனிப்படை போலிஸார் வீட்டில் பதுங்கி இருந்த ராகுல் என்பவரைச் செய்தனர். கைது செய்யப்பட்ட இவரிடம் நடத்திய விசாரணையில் ராகுல் நீச்சல் குளம் பராமரிப்பு பணிகளைச் செய்து வருவதும், அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமாரின் உறவினர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த போதைப் பொருட்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!
-
“நீங்கள் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்” : முதலமைச்சரிடம் நெகிழ்ந்து பேசிய பொதுமக்கள் !
-
“ஓரணியில் தமிழ்நாடு” - வீடு வீடாகச் சென்று முதலமைச்சர் பரப்புரை - மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய பொதுமக்கள்!