Tamilnadu
போதைப் பொருட்களை பதுக்கிய அதிமுக ஜெயக்குமாரின் உறவினர் கைது : போலிஸ் அதிரடி!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த காதர் மொய்தீன், 8 கிராம் மெத்தபெட்டமின் போதைப் பொருள் வைத்திருந்ததை அடுத்து தனிப்படை போலிஸார் அவரை கைது செய்தனர்.
பிறகு கைது செய்யப்பட்ட காதர் மொய் தீனிடம் நடத்திய விசாரணையில், சென்னை திருவல்லிக்கேணி சுல்தான் என்பவரின் வாட்ஸ் அப் குழுவில் தாம் இருப்பதாகவும், அதன் மூலமாகத்தான் போதைப் பொருள் வாங்கியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின்னர், சுல்தான் அலாவுதீன் என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது தான் திருவான்மியூரைச் சேர்ந்த ராகுல் என்பவரிடம் மொத்தமாகப் போதைப் பொருள் வாங்கிய தெரியவந்தது.
இந்த தகவலின் அடிப்படையில் திருவான்மியூர் பகுதிக்குச் சென்ற தனிப்படை போலிஸார் வீட்டில் பதுங்கி இருந்த ராகுல் என்பவரைச் செய்தனர். கைது செய்யப்பட்ட இவரிடம் நடத்திய விசாரணையில் ராகுல் நீச்சல் குளம் பராமரிப்பு பணிகளைச் செய்து வருவதும், அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமாரின் உறவினர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த போதைப் பொருட்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!