Tamilnadu
போதைப் பொருட்களை பதுக்கிய அதிமுக ஜெயக்குமாரின் உறவினர் கைது : போலிஸ் அதிரடி!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த காதர் மொய்தீன், 8 கிராம் மெத்தபெட்டமின் போதைப் பொருள் வைத்திருந்ததை அடுத்து தனிப்படை போலிஸார் அவரை கைது செய்தனர்.
பிறகு கைது செய்யப்பட்ட காதர் மொய் தீனிடம் நடத்திய விசாரணையில், சென்னை திருவல்லிக்கேணி சுல்தான் என்பவரின் வாட்ஸ் அப் குழுவில் தாம் இருப்பதாகவும், அதன் மூலமாகத்தான் போதைப் பொருள் வாங்கியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின்னர், சுல்தான் அலாவுதீன் என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது தான் திருவான்மியூரைச் சேர்ந்த ராகுல் என்பவரிடம் மொத்தமாகப் போதைப் பொருள் வாங்கிய தெரியவந்தது.
இந்த தகவலின் அடிப்படையில் திருவான்மியூர் பகுதிக்குச் சென்ற தனிப்படை போலிஸார் வீட்டில் பதுங்கி இருந்த ராகுல் என்பவரைச் செய்தனர். கைது செய்யப்பட்ட இவரிடம் நடத்திய விசாரணையில் ராகுல் நீச்சல் குளம் பராமரிப்பு பணிகளைச் செய்து வருவதும், அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமாரின் உறவினர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த போதைப் பொருட்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!