Tamilnadu
போதை பொருட்களின் புகலிடம் குஜராத் : அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு!
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலை பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், "போதைப்பொருள் வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அதற்கான அமைப்புகள் இருக்கிறது. இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
ஆனால் போதைப் பொருட்களின் புகலிடமாக குஜராத்தும் அதானி துறைமுகமும் தான் இருக்கிறது. இந்த உண்மையை பா.ஜ.க மறைப்பதுதான் வேடிக்கையாகவும் விந்தையாகவும் உள்ளது. பா.ஜ.கவின் பத்து வருட ஆட்சி வெறும் ட்ரெயிலர் தான் என்பதை மோடியே ஒத்துக்கொண்டுள்ளார். இதை நாங்கள் முன்பே கூறி இருந்தோம். ஒரு காலி பெருங்காய டப்பா. ட்ரெயிலரை நம்பி ஏமாற வேண்டாம் என்று நாங்கள் முன்பே கூறி இருக்கிறோம். அதனைப் பிரதமரே தற்போது ஒத்துக்கொண்டது வரவேற்கத்தக்கது.
குஷ்புக்கு ஏழைகளின் பட்டினி பசியைப் பற்றித் தெரியுமா?. ஒரு நாளாவது அவர்கள் ஒரு குடிசை வீட்டில் தங்கி இருப்பார்களா?. அவர்களின் வலியை இவர் உணர்ந்திருப்பாரா?. அவர் பேசியது ஆணவத்தின் உச்சம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!