Tamilnadu
”பேச்சில் நாகரிகம் வேண்டும்” : குஷ்புக்கு நடிகை அம்பிகா கடும் கண்டனம்!
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு மகளிருக்கு பல நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாதந்தோறும் ரூ.1000, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் பல்வேறு மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
அதிலும் கலைஞர் உரிமைத் தொகை மூலம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் திட்டமானது நாடு முழுவதும் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத் தொகையையும் சேர்த்துக்கொண்டனர். இந்த திட்டம் மூலம் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பணத்தை பெண்கள் தங்கள், தங்கள் குழந்தைகள், வீட்டுக்கு தேவையான சிறுசிறு பொருட்களை கூட வாங்கிக்கொள்ள முடியும். பலரும் பாராட்டும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள இந்த திட்டத்தை நடிகையும், பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ 'பிச்சை' என்று கூறி கொச்சைப்படுத்தும் விதமாக பேசியிருந்தார்.
இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் பெண்கள் குஷ்புவை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், நடிகை அம்பிகாவும் குஷ்பு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதில், "உதவி செய்தாலும் மக்களுக்கு நன்மை செய்தாலும் ஆதரிக்க வேண்டும். ஆதரிக்க விருப்பமில்லை எனில் எதையும் சொல்லாமல் இருக்க வேண்டும். அவமதிக்கும் வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாது. 'பிச்சை' என ஏன் சொல்ல வேண்டும். ஐந்து ரூபாய் என்றாலும் அது ஒரு உதவிதான்." என நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!