Tamilnadu
தமிழ்நாட்டிலேயே மோடி தங்கினாலும் பா.ஜ.க வெற்றி பெறாது : அமைச்சர் தா.மோ. அன்பரசன் அதிரடி!
சென்னை ஆலந்தூரில் ரூ.18.64 கோடி செலவில் அதிநவீன வசதியுடன் கூடிய சமுதாயக் கூடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், "சென்னையில் முதன் முறையாக அதி நவீன வசதிகளுடன் சமுதாய நலக்கூடம் கட்டப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு அடிக்கடி வருகிறார். ஆனால் மக்கள் வெள்ளத்தில் பாதித்த போது மோடி வந்தாரா?. வெள்ள பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்பதற்காக ரூ.38 ஆயிரம் கோடி நிவாரண நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினார்.
ஆனால் அவர்கள் ஒத்த நய பைசா கூட வழங்கவில்லை. இருந்தும் மக்களுக்கு ரூ.600 நிவாரண நிதி வழங்கியது தமிழ்நாடு அரசு. பெரியார், திருக்குறள் பற்றி எல்லாம் பேசும் மோடி மக்கள் பாதிக்கும் போது வந்து ஆறுதல் சொன்னது உண்டா?. இப்போது மோடி ஏன் இப்படிப் பேசுகிறார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
மோடி தமிழ்நாட்டிலேயே தங்கினாலும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறாது. 40 இடங்களிலும் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது உறுதி" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”
-
“ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.. கட்டாயப் படுத்தப்பட்டாரா?” - முழு விவரம் அறிய!
-
“எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. உடன்பிறப்புக்களே தயாராகுங்கள்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தவெக அமைச்சர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்... 15 நாட்கள் மட்டுமே கெடு... விவரம் உள்ளே!
-
போதை பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ : தவெக அமைச்சருக்கு எதிராக களமிறங்கும் திமுக மாணவர் அணி !