Tamilnadu
தூத்துக்குடி வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண் : பிறந்த குழந்தைக்கு கனிமொழி என பெயர் சூட்டல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் மக்கள் குடியிருப்புகளில் புகுந்தது. இதையடுத்து மக்களை மீட்கும் களத்தில் கடந்த 18ம் தேதியில் இருந்தே கனிமொழி இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள். கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்கு தேங்கி உள்ள மழைநீர் வெள்ளத்தில் இறங்கி மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 21ம் தேதி ஸ்ரீ வைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள கொற்கை ஊராட்சியில் அபிஷா என்ற கர்ப்பிணிக் பெண் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கனிமொழி எம்.பி அவர்களது உதவி எண்ணிற்று தொலைபேசி வந்துள்ளது.
இதையடுத்து உடனே கனிமொழி எம்.பி தனது காரை வெள்ள நீர் சூழ்ந்த பகுதியான கொற்கை ஊராட்சிக்கு அனுப்பிவைத்தார். பிறகு மூன்றாம் தளத்திலிருந்த கர்ப்பிணிப் பெண்ணைப் பத்திரமாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அன்றைய தினம் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது.
வெள்ளம் சூழ்ந்த கிராமத்தில் தவித்த கர்ப்பிணிக்குப் பெண்ணிற்குக் கனிமொழி எம்.பி. உதவியதன் வாயிலாக சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடிந்தது. பிறந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், தானும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் எல்லாவற்றிற்கும் கனிமொழி எம்.பி தான் காரணம் என்றும் அபிஷா மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
இதையடுத்து இன்று அபிஷா மற்றும் அவருக்குப் பிறந்த பெண் குழந்தையைச் சந்திக்க அவரது இல்லத்திற்குக் கனிமொழி சென்றார். அப்போது குழந்தை கையில் வாங்கி, பெற்றோர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அக்குழந்தைக்குக் கனிமொழி என பெயர் வைத்தார்.
Also Read
-
தமிழ்நாட்டில் விடுமுறை அறிவிப்பு… தேர்தல் நாளன்று பொது விடுமுறை.. வெளியான அரசாணை! - முழு விவரம் உள்ளே!
-
பிரம்மபுத்ராவில் சீனாவின் அணை : ஒன்றிய அரசின் எதிர் நடவடிக்கை என்ன? - டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!
-
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வசூலித்த நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு பாகுபாடு : பி.வில்சன் MP குற்றச்சாட்டு!
-
ரூ.80 ஆயிரம் கோடிக்கு எங்கே போவார்கள்? : அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சித்த கி.வீரமணி!
-
“தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணிநேரம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும்!” : சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!