Tamilnadu
"நீதிமன்ற தீர்ப்பால் கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்து விட்டே தீரவேண்டும்".. அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
சென்னை கோட்டூர்புரத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "5,000 கன அடி வீதம் 15 நாட்களுக்குக் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தண்ணீர் திறப்பால் குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும்."
மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்தியே தீர வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் உச்சநீதிமன்றத்தை அவமதிப்புக்குக் கர்நாடக அரசு ஆளாகும். எனவே கர்நாடக அரசு அந்த நிலைக்கு செல்லாது என நினைக்கிறோம். கர்நாடக அரசு நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும்.
நாங்கள் ஒட்டுமொத்த தண்ணீரை கேட்கவில்லை. தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைதான் கேட்கிறோம். காவிரி நீர் கர்நாடக மாநிலத்திற்கு மட்டுமல்ல, ஆற்றின் கடைமடை வரை செல்லும் தமிழ்நாட்டிற்கும் உரிமை உள்ளது. காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்றால் பயனில்லை என்பதால்தான் உச்சநீதிமன்றத்திக்கு சென்றோம். தற்போது தமிழ்நாட்டிற்கான தண்ணீரை போராடி பெற்று வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!