Tamilnadu
"நீதிமன்ற தீர்ப்பால் கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்து விட்டே தீரவேண்டும்".. அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
சென்னை கோட்டூர்புரத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "5,000 கன அடி வீதம் 15 நாட்களுக்குக் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தண்ணீர் திறப்பால் குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும்."
மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்தியே தீர வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் உச்சநீதிமன்றத்தை அவமதிப்புக்குக் கர்நாடக அரசு ஆளாகும். எனவே கர்நாடக அரசு அந்த நிலைக்கு செல்லாது என நினைக்கிறோம். கர்நாடக அரசு நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும்.
நாங்கள் ஒட்டுமொத்த தண்ணீரை கேட்கவில்லை. தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைதான் கேட்கிறோம். காவிரி நீர் கர்நாடக மாநிலத்திற்கு மட்டுமல்ல, ஆற்றின் கடைமடை வரை செல்லும் தமிழ்நாட்டிற்கும் உரிமை உள்ளது. காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்றால் பயனில்லை என்பதால்தான் உச்சநீதிமன்றத்திக்கு சென்றோம். தற்போது தமிழ்நாட்டிற்கான தண்ணீரை போராடி பெற்று வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?