Tamilnadu
தெருவில் படமெடுத்த 13 அடி நீள ராஜநாகம்.. பதறியடித்து ஓடிய பொதுமக்கள்: விரைந்து வந்த வனத்துறை!
கன்னியாகுமரி மாவட்டம் பால்குளம் பகுதியில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் அதிகம் உள்ளது. இந்நிலையில் இங்குள்ள குடியிருப்பில் 13 அடி நீள ராஜநாகம் ஒன்று புகுந்துள்ளது.
இந்த ராஜநாகத்தைப் பார்த்த மக்கள் பீதியடைந்து உடனே வனத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பிறகு விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் பாம்பைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் சிக்காமல் பாம்பு போக்குக் காட்டிக் கொண்டே இருந்தது.
இதையடுத்து 3 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு ராஜநாகத்தின் தலையை அழுத்திப் பிடித்து அதைச் சாக்குப்பையில் போட்டு அடைத்தனர். பிறகுதான் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
பின்னர் பிடிபட்ட ராஜநாகத்தை அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு சென்று விடப்பட்டது. இதேபோன்று தடிக்காரண்கோணம் பகுதியில் 12 அடி நீளம் கொண்ட ராஜநாகம் பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!