இந்தியா

நீ எல்லாம் குதிரையில் ஊர்வலம் போலாமா?.. பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்: திருமணத்தில் நடந்த கொடூரம்!

ஆக்ராவில் திருமண வரவேற்பில் குதிரை மீது சென்ற பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீ எல்லாம் குதிரையில் ஊர்வலம் போலாமா?.. பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்: திருமணத்தில் நடந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி அருகே உள்ள ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் அஜய் ஜாதவ். இவருக்குக் கடந்த மே 4ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது மணமகனை அவரது உறவினர்கள் குதிரையில் அமரவைத்து ஊர்வலமாகக் கல்யாண மண்டபத்திற்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் சோஹல்லா ஜாவத் பஸ்தி நகர் பகுதி அருகே வந்த போது சிலர் இவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அவர்கள் 'பட்டியலினத்தைச் சேர்ந்த நீ எப்படி குதிரையில் ஊர்வலம் செல்லாம்' என கூறி மணமகனை குதிரையிலிருந்து கீழே இறக்கியுள்ளனர்.

நீ எல்லாம் குதிரையில் ஊர்வலம் போலாமா?.. பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்: திருமணத்தில் நடந்த கொடூரம்!

பிறகு மணமகன் மற்றும் உடன் இருந்த உறவினர்களை இந்த கும்பல் தாக்கியுள்ளது. இவர்களைத் திருமண மண்டபம் வரை விரட்டிச் சென்றுள்ளனர். மேலும் திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி மின்சாரத்தைத் துண்டித்துள்ளனர். இதனால் நடக்க இருந்த திருமணம் நின்றுபோனது.

இது குறித்து மணமகனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் யோகேஷ் தாக்கூர், ராகுல் குமார், சோனு தாக்கூர், குணால், சிஷிபால் உட்பட 20 பேரைக் கைது செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories