Tamilnadu
12 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?.. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சொன்ன முக்கிய தகவல்!
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதி முடித்து விட்டு தங்களது முடிவுக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் மாணவர்கள் தங்களது உயர் கல்வி குறித்துப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் சில மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் நீட் தேர்வு வரும் மே 7ம் தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 12ம் வகுப்புத் தேர்வு வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது குறித்துக் கூறிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "மே 7ம் தேதி நீட் தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனால் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி குறித்து முதலமைச்சர் உடன் ஆலோசனை நடத்திய பின் அறிவிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!
-
தமிழ்த்தாயின் தலைமகன் : பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் : காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் MRK உத்தரவு!