Tamilnadu

தடுப்புச் சுவரில் மோதிய Two wheeler.. காதலன் கண் எதிரே காதலிக்கு நடந்த கொடூர சம்பவம்!

சென்னை அடுத்த ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் அஜித். அதேபோல் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலை நேற்று காதலர்கள் இருவரும் செம்பரம்பாக்கத்தில் உள்ள பூங்காவிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது குன்றத்தூர் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரில் மோதியது.

இதில் காதலர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த காதலி செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அஜித் பலத்துக் காயமடைந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் செல்வி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் அஜித்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் காதலன் கண் எதிரே காதலி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “சாகும் வரை..”-ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்.. உயிரை விட்ட பள்ளி சிறுமி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு