Tamilnadu
அதிமுக ஆட்சியில் ரூ.12 கோடி லஞ்சம்: CMDA அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை!
சென்னை சோழிங்கநல்லூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த காக்னிஸன்ட் நிறுவனம் கடந்த 2011ஆம் ஆணடு புதிய கட்டடம் கட்டும் பணியைத் தொடங்கியது.
ஆனால் அதற்கு சி.எம்.டி.ஏ. அனுமதியைப் பெறவில்லை. இந்நிலையில் கட்டடம் கட்டத் தொடங்கி 14 மாதங்களுக்குப் பின்னர் சி.எம்.டி.ஏ. அனுமதிக்காக விண்ணப்பித்த அந்த நிறுவனம், 12 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து அனுமதியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து காக்னிஸன்ட் நிறுவனத்திற்கு அமெரிக்க பங்குச்சந்தை பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு அபராதம் விதித்தது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு நடத்திய விசாரணையில் முறைகேடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் லஞ்சம் கொடுத்த காக்னிஸன்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களும் விரைவில் வழக்கில் சேர்க்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க ஆட்சியின் போது பல்வேறு துறைகளில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடித்த வருகிறது. இந்நிலையில் காக்னிசன்ட் நிறுவனத்திடமும் லஞ்சம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!