Tamilnadu
கண்ணில் பெப்பர் ஸ்பிரே அடித்து ரூ.50 லட்சம் வழிப்பறி: 24 மணி நேரத்தில் குற்றவாளிகளைப் பிடித்த போலிஸ்!
செங்கல்பட்டு மாவட்டம் மேலமையூர்வல்லம் பல்லவன் தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசைன். இவர் சென்னை மண்ணடி பகுதியில் உள்ள பணப்பரிவர்த்தனை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர், திருவல்லிக்கேணியில் இருந்து மண்ணடி நோக்கி ரூ.50 லட்சம் பணத்துடன் காஜா மொய்தீன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தார்.
இவர்கள் யானை கவுனி தெரு, பெருமாள் கோயில் அருகே சென்றபோது மற்றொரு வாகனத்தில் வந்த இருவர் இவர்கள் வாகனத்தின் மீது மோதி கீழே தள்ளியுள்ளனர். பிறகு ஜாகிர் உசைன் முகத்தில் பேப்பர் ஸ்பிரே அடித்து அவர் வைத்திருந்த ரூ.50 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து ஜாகிர் உசைன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் கொள்ளை நடந்த இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் ஜாகிர் உசைன் உடன் இருசக்கர வாகனத்தில் வந்த காஜா மொய்தீனுடன் விசாரணை செய்தபோது அவர்தான் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த காஜா மொய்தீன் நண்பர்கள் இரண்டு பேரை போலிஸார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காஜா மொய் தீனையும் கைது செய்துள்ளனர். கொள்ளை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலிஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!