Tamilnadu
திருச்சி இளைஞர் உயிரிழந்த விவகாரம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
தமிழ்நாட்டில் 2663 பேருக்கு H3N2 காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ஒன்றிய அரசின் சுகாதாரத் துறையின் சார்பில் தகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.தமிழ்நாட்டில் 1586 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 2663 பேர் காய்ச்சல் பாதிப்பு கொண்டவர்களாகக் கண்டறியப்பட்டுத் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
சமுதாய மற்றும் சமூக விழாக்களில் பெரிய அளவில் கூட்டம் கூடும்போது முகக் கவசம், தனிமனித இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது அவசியம். பள்ளி மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவ வாகனங்கள் மூலம் நடமாடும் மற்றும் குட்கிராமங்களுக்கும் சென்று சிறப்புக் காய்ச்சல் முகாம்களை நடத்த வலியுறுத்தியுள்ளோம்.
திருச்சி தெப்பக்குளத்தைச் சேர்ந்த இளைஞர் அமைச்சர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே மிகவும் மோசமான உடல் நிலை பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று இறந்தவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழப்புக்குக் காரணம் கொரோனா பதிப்பா இல்லை H3N2 வைரஸ் பதிப்பா என்பது குறித்து அறிய ஆய்வகத்திற்கு மாதிரிகளை அனுப்பி உள்ளோம். அதன் முடிவு வந்த பிறகு தெரியும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கழகத் தலைவரின் அன்பில்.. தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையும் பார்க்கிறோம்” : தங்கம் தென்னரசு!
-
“அதிமுக. MLAக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் விஜய்; பாஜகவின் ஜெராக்ஸ்” : தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு!
-
ஒன்றிய அரசுடன் விஜய் நெளிந்து குழைந்தது ஏன்? தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவா? : முரசொலி சரமாரி கேள்வி!
-
“திறக்கப்படாத மேட்டூர் அணையால் வேதனையின் உச்சத்தில் விவசாயிகள்!” : தவெக அரசுக்கு திமுக கண்டனம்!
-
“டெல்லி சென்று கழக அரசின் சாதனைகளுக்கு Sticker ஒட்டியிருக்கிறது SofaModel அரசு” : உதயநிதி ஸ்டாலின் பளார்!