Tamilnadu
“ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க ஏன் போட்டியிடவில்லை ?” : அண்ணாமலையை வெளுத்து வாங்கிய ஆசிரியர் கி.வீரமணி!
திருப்பூர் அரிசி கடை வீதியில் திராவிடர் கழகம் சார்பாக சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில், சமூக நீதியை பாதுகாக்கும் வகையிலான திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதை பொறுத்துக் கொள்ள முடியாத தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாத விரக்தியில் ஒன்றிய அரசு ஏதோதோ செய்து கொண்டுள்ளது.
அதன் காரணமாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சனாதனம் திராவிட மாடலுக்கு எதிரானது. தமிழ்நாட்டில் நாங்கள் வளர்ந்து விட்டோம், நாங்கள்தான் எதிர்க்கட்சி என கூறிக் கொள்ளும் பா.ஜ.க அதனை உறுதிப்படுத்த ஏன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.
தங்கள் பலத்தை நிரூபிக்க பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையே போட்டியிட்டிருக்கலாமே? இதை செய்யாமல் பா.ஜ.க. அ.தி.மு.கவை வைத்து பொம்மலாட்டம் ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது, அண்ணா திமுகவாக இருந்த அதிமுக தற்போது அடமானதிமுகவாக மாறி உள்ளது.
எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்த ஒன்றிய பாஜக அரசு அதனை எதுவும் நிறைவேற்றவில்லை. இது குறித்து கேட்டால் ஜூம்லா எல்லாம் சும்மா சொன்னதாக உள்துறை அமைச்சர் பதிலளித்து வருகிறார். சேது சமுத்திரத் திட்டம் அதன் தொடக்க காலத்தில்யே நிறைவேற்றி இருந்தால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். அதை விடுத்து, நம்பிக்கையின் அடிப்படையில் ராமர் பாலம் இருந்ததாக காரணம் காட்டி, அதனை தொடர்ந்து எதிர்க்கும் பணியை பாஜக செய்து வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?
-
‘உரிமைத்தொகை’யால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்! : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்!
-
அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குழந்தை உரிமைகள் தேசிய ஆணையத்திற்கு சல்மா MP கடிதம்!
-
கரூர் விவகாரம் : ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் - சிபிஐக்கு திமுக புகார் மனு!