Tamilnadu
வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி.. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியை கைது செய்த போலிஸ்!
திருச்சி பாலக்கரை தெற்கு கல்லுக்காகத் தெருவைச் சேர்ந்தவர் சுரேந்திரன் ( 25). பி.இ. முடித்துள்ள வேலை தேடி வந்துள்ளார். மேலும் தமிழ்நாடு காகித ஆலையில் வேலைக்கு விண்ணப்பித்து அதற்கான தேர்வும் எழுதியுள்ளார்.
அப்போது, அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப பிரிவைச் சேர்ந்த சிவராஜ், செந்தில் ஆகிய இருவர் சுரேந்திரனுக்கு அறிமுகம் ஆகியுள்ளனர். இதையடுத்து அவர்கள் அ.தி.மு.க ஆட்சிதான் நடக்கிறது நாங்கள் வேலை வாங்கி தருகிறோம் என கூறியுள்ளனர்.
மேலும் ரூ. 12 லட்சம் பணம் வரை பணம் செலவாகும் எனவும் கூறியுள்ளனர். அரசு வேலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் சுரேந்திரனும் ரூ.12 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர்கள் பணி நியமன ஆணையை வழங்கியுள்ளனர்.
ஆனால் அது போலியான பணி நியமன ஆணை என அறிந்த சுரேந்திரன் கொடுத்த பணத்தைத் திருப்பி கொடுக்கும் படி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் பணத்தைத் திரும்பத்தர மறுத்து சுரேந்திரனை மிரட்டியுள்ளனர். இதையடுத்து அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.12 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக சிவராஜ், செந்தில் ஆகிய இரண்டு பேர் மீது காவல்நிலையத்தில் சுரேந்திரன் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிவராஜை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள செந்திலை போலிஸார் தேடி வருகின்றனர். மேலும் இருவரும் வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளார்களா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!