Tamilnadu
தமிழ்நாட்டில் புதிதாக 25 ஆரம்ப சுகாதார மையம் திறக்க ஒன்றிய அரசு அனுமதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழ்நாட்டில் பருவகால மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள் குறித்தும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,"தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 96%மும், இரண்டாம் தவணை 91% மும் செலுத்தப்பட்டு உள்ளது. அக்டோபர் 30 ஆம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்த ஒன்றிய அரசு தெரிவித்திருந்த நிலையில் கூடுதலாக காலம் நீட்டிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக 25 ஆரம்ப சுகாதார மையமும்,25 நகர்புற சுகாதார மையமும் துவங்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எங்கு துவங்குவது குறித்து விரைவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும். கடந்த 20 நாட்களில் 13,178 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது,இந்த முகாம்களில் 19 லட்சத்து 79 ஆயிரத்து 351 நபர்கள் பரிசோதனை செய்யபட்டு உள்ளன" என தெரிவித்துள்ளார்.
Also Read
- 
	    
	      
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக 2 பேர் நியமனம் : கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
 - 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
 - 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!
 - 
	    
	      
கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
 - 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!