Tamilnadu
எமொ்ஜென்சி லைட்டிற்குள் தங்கக்கட்டி.. 1.8 கிலோ தங்கத்தை கடத்தி பெண் பயணி - ஏர்போட்டில் சிக்கியது எப்படி?
மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம், நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனா்.
அப்போது ஒரு பெண் பயணி சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவருடைய உடைமைகளை சோதனையிட்டனர். அவருடைய சூட்கேஸ்க்குள் புதிய எமர்ஜென்சி லைட் ஒன்று இருந்தது.
அந்த அதிகாரிகள் அந்த எமா்ஜென்சி லைட்டை எடுத்து பார்த்த போது, அது வழக்கத்தை விட அதிக கனமாக இருந்தது. இதை அடுத்து அந்த விளக்கை கழட்டி பார்த்து சோதித்தனா். அதனுள் தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.
எமா்ஜென்சி லைட்டிற்குள் 1.8 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 80 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.மலேசிய நாட்டிலிருந்து தங்கத்தை நூதனமான முறையில் கடத்தி வந்த பெண் பயணியை கைது செய்து, அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !