Tamilnadu
சாலை விபத்தில் காயமடைந்த பெண்.. தனது காரிலேயே மருத்துவமனையில் சேர்த்த மயிலாடுதுறை ஆட்சியர்!
நாகப்பட்டினம் மாவட்டம் அம்பல் காலனியைச் சேர்ந்த வினோத்குமார். இவர் தனது மனைவி சுபஸ்ரீ மற்றும் 10 மாத கை குழந்தை சர்வேஸ் உடன் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது வழுவூர் அருகே பண்டாரவாடை என்னும் இடத்தில் அவருடைய இருசக்கர வாகனம் பழுதாகியதில் நிலை தடுமாறி மனைவி மற்றும் குழந்தையுடன் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவரது மனைவிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து குத்தாலம் தாலுகாவில் ஆய்வுப் பணிக்காக அவ்வழியே சென்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா சாலை விபத்தில் காயமடைந்த தம்பதியினரைப் பார்த்துள்ளார்.
உடனே காரி நிறுத்திய அவர், தனது காரிலேயே வினோத் மற்றும் அவரது மனைவி குழந்தையை ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். அங்கு மருத்துவர்கள் காயமடைந்த தம்பதியினருக்குச் சிகிச்சை அளித்தனர்.
108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக காத்திருக்காமல் மாவட்ட ஆட்சியரின் வாகனத்தின் மூலம் முகத்தில் காயம் அடைந்த பெண்ணின் குடும்பத்தை மருத்துவமனையில் கொண்டு சேர்த்த மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு அனைவரும் வாழ்த்திப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!